‘மகளுக்காக மட்டும் தான்’… நடிகை ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் பிரிவுக்கு இதுதான் காரணமா..? வெளியான அதிர்ச்சி தகவல்..

By Begam

Updated on:

முன்னாள் உலக அழகியும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை காதலித்து, இருவீட்டர் சம்மதத்துடன் 2007ல்  திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யாபச்சன் என்று மகள் உள்ளார். இவர் உலக அளவில் பிரபலமான ஹீரோயின்களில் ஒருவர். இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘இருவர்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

   

இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் அடைந்தது. இதை தொடர்ந்து தற்பொழுது இவர் முன்னணி ஹீரோயினாக ஜொலித்துக் கொண்டுள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பாராட்டப்பட்டது.

நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகர் அபிஷேக் பச்சன் இவர்களை பற்றி அடிக்கடி விவாகரத்து சர்ச்சை எழுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. அதன்படி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அபிஷேக் பச்சனின் கையில் அவரது திருமண மோதிரம் இல்லை. இதைப்பார்த்த ரசிகர்கள் அவர்களது பிரிவு உண்மைதானா? என கேள்வி எழுப்ப தொடங்கினர். அனால் இத்தகவல் உண்மைதான் என்றும் ஒரு சிலர் கூறிவருகின்றனர்.

அபிஷேக் பச்சனின் தாயாருக்கும், ஐஸ்வர்யா ராயுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் எப்பொழுதும் இருப்பதாகவும், இதனால் அவர்களிருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டைகள் எழுவதாகவும் கூறி வருகின்றனர். இதுமட்டுமின்றி மகளுக்காக மட்டுமே நடிகை ஐஸ்வர்யா ராயும், அவரது கணவரும் ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும், தற்பொழுது ஐஸ்வர்யா ராய் தனது அம்மா வீட்டில் தான் இருப்பதாகவும் அவரின் நெருங்கிய உறவினர்கள் கூறி வருகின்றனர்.