“விஜய்க்கு நோ.. இபிஎஸ்க்கு டாட்டா… யாரும் எதிர்பார்க்காத ‘அந்த’ தேசியக் கட்சிக்கு தாவும் எஸ்.பி.வேலுமணி?… அதிமுகவிற்கு அடுத்த மரண அடி…!

By SATHISH R on ஆடி 3, 2026

Spread the love

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 50 ஆண்டுகால திமுக-அதிமுக ஆகிய இருமுனை அரசியலை உடைத்து, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ள சூழலில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கடுமையான உட்கட்சி பூசலைச் சந்தித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி காரணமாக சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய முன்னாள் அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் அடுத்தடுத்து தவெகவில் இணைந்து வரும் நிலையில், தற்போது கொங்கு மண்டலத்தின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் அதிமுகவிலிருந்து விலக முடிவெடுத்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

   

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் தனி அணியாகச் செயல்பட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தரப்பு இவர்களின் கோரிக்கைகளுக்குப் செவிசாய்க்காததாலும், உட்கட்சி விதிகளின்படி அவரை பதவியிலிருந்து நீக்குவது கடினம் என்பதாலும் அதிருப்தி தலைவர்கள் மாற்றுக்கட்சிகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலில், கொங்கு மண்டலத்தின் முழுப் பொறுப்பையும் வழங்கும் ஆஃபருடன் வேலுமணியைத் தவெகவில் இணைக்கப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், ஆனால் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய அவர் மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

   

திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தேசியக் கட்சி ஒன்றில் இணைவதே தனது அரசியல் எதிர்காலத்திற்குப் பாதுகாப்பானது என எஸ்.பி.வேலுமணி கருதுவதாகத் தெரிகிறது. இதன் காரணமாக அவர் தவெகவை நிராகரித்துவிட்டு, தேசியக் கட்சியான பாஜகவின் டெல்லி தலைமையுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. அதே வேளையில், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ‘வீ தி லீடர்’ அமைப்பில் இணைவது குறித்தும் அவர் தீவிரமாக ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. கொங்கு மண்டலத்தின் மிக முக்கியத் தூணாகக் கருதப்படும் எஸ்.பி. வேலுமணி பாஜாகவில் இணைந்தால், அது தமிழக அரசியலிலும், குறிப்பாக அதிமுகவிலும் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.