“மகனைத் தமிழ்நாட்டுக்கே தத்து கொடுத்துட்டோம்…” விஜய்யை விமர்சிப்பவர்களுக்கு எஸ்.ஏ.சி ஆவேசப் பதில்…!!

By Devi Ramu on சித்திரை 21, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீதான தனிப்பட்ட விமர்சனங்களுக்கு அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். விஜய்யின் குடும்ப வாழ்க்கை மற்றும் விவாகரத்து குறித்து எதிர்க்கட்சிகள் கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டிய அவர், தனது மகனைத் தமிழ்நாட்டு மக்களுக்காகவே தத்துக் கொடுத்துவிட்டதாக உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இருட்டில் மக்கள் பாதுகாப்பிற்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதாலேயே விஜய் மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்வதைத் தவிர்க்கிறார் என்றும், கரூரில் நடந்த கசப்பான சம்பவமே இதற்குக் காரணம் என்றும் அவர் விளக்கமளித்தார்.

விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ வெளியாவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் இணையத்தில் படம் கசிந்த விவகாரத்திற்குப் பின்னால் பெரிய அரசியல் சதி இருப்பதாக எஸ்.ஏ.சி அதிரடியாகக் கூறியுள்ளார். விஜய்யின் அரசியல் வளர்ச்சியைத் தடுக்க சினிமாத் துறையையும் ஒரு கருவியாக எதிரிகள் பயன்படுத்துவதாகவும், இது தொடர்பாக ஏற்கனவே மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எத்தனை தடைகள் வந்தாலும் விஜய்யின் மன உறுதியைக் குலைக்க முடியாது என்றும், அவர் தனது இலக்கில் உறுதியாக இருப்பார் என்றும் தனது பேட்டியில் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.