“இனி இந்தியாவை எவனாலும் தொட முடியாது” எதிரிகளின் நெஞ்சில் இடியை இறக்கிய ‘S-400’.. வான்வெளியில் இரும்புக்கோட்டையாக மாறும் தேசம்…!!

Spread the love

இந்தியாவின் வான்வெளிப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், ரஷ்யாவிடமிருந்து 4-வது ‘எஸ்-400’ (S-400) அதிநவீன ஏவுகணைப் பாதுகாப்புப் படைப்பிரிவை (Squadron) இந்திய விமானப்படை வெற்றிகரமாகப் பெற்றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கடல் வழியாக இந்தியா வந்தடைந்த இந்த ஏவுகணை அமைப்பு, நாட்டின் முக்கிய எல்லைப் பகுதியில் விரைவில் நிலைநிறுத்தப்பட உள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக விநியோகத்தில் ஏற்பட்ட தாமதத்திற்குப் பிறகு, இந்தத் தற்போதைய வரவு இந்தியப் பாதுகாப்புத் துறைக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியா மற்றும் ரஷ்யா இடையே கடந்த 2018-ஆம் ஆண்டில், சுமார் 5.43 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஐந்து எஸ்-400 ஏவுகணை அமைப்புகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் முதல் மூன்று ஏவுகணைப் பிரிவுகள் ஏற்கனவே இந்தியாவிற்கு வழங்கப்பட்டு, அவை வான் பாதுகாப்புப் பணியில் இணைக்கப்பட்டுள்ளன. தற்போது வந்துள்ள 4-வது பிரிவைத் தொடர்ந்து, ஒப்பந்தத்தின் இறுதி மற்றும் 5-வது ஏவுகணைப் பிரிவு வரும் நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவின் இந்த எஸ்-400 ஏவுகணை அமைப்பு, உலகிலேயே மிக அதிநவீன நீண்ட தூர வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது சுமார் 600 கி.மீ தொலைவில் வரும் எதிரி நாட்டுப் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கண்டறிந்து, 400 கி.மீ தூரத்திலேயே அவற்றை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. அண்மையில் நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்துர்’ (Operation Sindoor) ராணுவ நடவடிக்கையின் போது இந்த எஸ்-400 அமைப்பு மிகச் சிறப்பாகச் செயல்பட்டு எதிரிகளின் வான்வழி அச்சுறுத்தல்களை முறியடித்ததால், மேலும் 5 கூடுதல் எஸ்-400 பிரிவுகளை வாங்குவதற்கும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Soundarya

Recent Posts

இரத்தக் கடலாக மாறிய கடற்கரை.. பாரம்பரியம் என்ற பெயரில் 700 திமிங்கிலங்கள், டால்பின்கள் கொடூர வேட்டை… உலகையே உலுக்கிய கொடூரம்..!!

ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…

4 minutes ago

“இனி இப்படித்தான்” வங்கிகளில் கோல்டு லோன்… RBI வங்கியின் அதிரடி அறிவிப்பு..!

வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…

6 minutes ago

பாவம்..! நடுரோட்டுல அனாதையா நிக்குறாரு விஜயபாஸ்கர்..எங்கே போறதுன்னு தெரியாம… திமுக அமைச்சர் ரகுபதி உருக்கம்..!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…

18 minutes ago

டிவி சேனல் தொடங்கும் முதல்வர் விஜய்… நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்பில் ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…

21 minutes ago

திருவள்ளுவருக்கு மீண்டும் காவி பூசுறாங்க… அதை கேட்க வக்கில்லை… விஜய் அரசை கிழித்துத் தொங்கவிட்ட உதயநிதி ஸ்டாலின்..!!

தமிழகத்தில் தவெகவுக்குத் தெரியாமல் வாக்களித்துவிட்டோமோ என்று ஓட்டுப்போட்ட மக்களே நினைக்கும் அளவுக்குத்தான் இன்றைய ‘சோபா மாடல்’ ஆட்சி உள்ளதாக எதிர்க்கட்சித்…

25 minutes ago

சற்றுமுன்: டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்… தமிழக அரசின் முக்கிய முடிவு..!!

தமிழகத்தில் ஜூன் 30-ஆம் தேதியுடன் பழைய டாஸ்மாக் பார்களின் டெண்டர்கள் முடிவடைய உள்ள நிலையில், அந்நிறுவனத்தின் செயல்பாடுகளில் பல அதிரடி…

28 minutes ago