உங்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ. 236 பிடித்தம் செய்யப்படும்… என்ன காரணம் தெரியுமா…?

By admin on தை 22, 2025

Spread the love

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக இருக்கும் SBI வங்கியில் நீங்கள் கணக்கு வைத்திருந்தால் இந்த செய்தி உங்களுக்காக தான். உங்களது வங்கி கணக்கில் இருந்து ரூ 236 பிடித்தம் செய்யப்படும். அது எதற்காக என்ன காரணத்துக்காக பிடித்தம் செய்யப்படுகிறது ஆகிய விவரங்களை பற்றி இனி காண்போம்.

   

தற்போதைய காலகட்டத்தில் அனைவருக்கும் வங்கி கணக்கு என்பது இருக்கிறது. பணத்தை டெபாசிட் செய்வது, கடன் வாங்குவது, லோன் எடுப்பது, நகையை அடமானம் வைப்பது என பல வேலைகளுக்கு அன்றாடம் வங்கிகளை தேடி மக்கள் சென்று வருகின்றனர். அந்த வகையில் SBI தனது வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 236 ரூபாய் பிடித்தம் செய்வதாக கூறுகிறது. இதன் காரணம் என்ன என்பது பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.

   

 

SBI வங்கியின் டெபிட் மற்றும் ஏடிஎம் கார்டுக்கான வருடாந்திர பராமரிப்பு சேவைக்காக பிடித்தம் செய்யப்படுகிறது. சேவை கட்டணத்தின் அடிப்படையில் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 236 கழிக்கப்படுகிறது. டெபிட் கார்டுகளுக்கான ஏஎம்சி கட்டணம் ரூபாய் 200 அதனுடன் 18 சதவீதம் ஜிஎஸ்ட் சேர்த்து ரூ 236 தொகை படித்தம் செய்யப்படுகிறது. இதை தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் கழிக்கப்பட்டால் பயப்படத் தேவையில்லை இது எஸ்பிஐ இன் பராமரிப்பு கட்டணம் தான்.