விஜய் பட நடிகைக்கு சம்மந்தப்பட்ட ரூ.97 கோடி சொத்துக்கள் முடக்கம்… அதிரடி காட்டிய அமலாக்கதுத்துறை… பரபரப்பில் திரையுலகம்… 

By Begam

Published on:

பாலிவுட் திரை உலகில் 90களில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷில்பா ஷெட்டி. ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள இவர் தமிழில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக மிஸ்டர். ரோமியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு விஜயின் குஷி திரைப்படத்தில் பேக்கரினா என்னும் பாடலில் நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்திருந்த இவர் பாலிவுட்டில் எக்கசக்கமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

   

கடந்த 2009ல் ராஜ் குந்த்ரா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு,  இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் ஷில்பா ஷெட்டிக்கு தற்போது 48 வயது.  ஷில்பா ஷெட்டி தனது கணவர் ராஜ் குந்த்ராவை விவாகரத்து செய்து விட்டதாகவும் சமீபத்தில் வைரலாக பேசப்பட்டது. தற்பொழுது  பிட்காயின் மோசடி வழக்கில்,  நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் பெயரில் உள்ள 97 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த செய்தி திரையுலகையே தற்பொழுது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது, 2017-ஆம் ஆண்டு பிட்காயினில் முதலீடு செய்தால் மாதம் 10 சதவிகிதம் வட்டி வழங்கப்படும் என்று ‘வேரியபில் டெக் லிமிடெட்’ நிறுவனம் நாடு முழுவதும் விளம்பரம் செய்தது. அப்பொழுது பொது மக்களிடமிருந்து ரூ.6,600 கோடி அளவுக்கு வசூலித்தது. ஆனால் கூறியபடி வட்டி வழங்காமல் மக்கள் முதலீடு செய்த பணம்  மோசடிக்கு உள்ளானது

இந்த பிட்காயின் மோசடியில் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் , வழக்கு விசாரணை செய்யப்பட்டு மோசடி ஊர்ஜிதமாகியுள்ளது. எனவே இவர்களுக்கு சொந்தமான 97 கோடி மதிப்புள்ள சொத்துகள் அமலாக்க துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.