ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில்… குற்றவாளி குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.5 லட்சம் வெகுமதி… காவல்துறை அறிவிப்பு..!!

By Soundarya on ஆடி 21, 2025

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி தன்னுடைய பாட்டி வீட்டில் தங்கி அந்த பகுதியில் உள்ள நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளி முடிந்து திரும்பி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது சிறுமி  தனியாக செல்வதை நோட்டமிட்ட நபர் ஒருவர் சிறுமியின் வாயை கையால் பொத்தி மாந்தோப்புக்குள்  தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பித்த சிறுமி தனக்கு நடந்த சம்பவம் குறித்து உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளார்கள்.

இதனையடுத்து அந்த நபரை தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.  இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், தேடப்படும் நபர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு காவல்துறை 5 லட்சம் வெகுமதி அளித்துள்ளது. சந்தேக நபர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 9952060948 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.