தமிழ்நாட்டில் வேலையில்லாத இளைஞர்களுக்கு ₹1,000 வரை உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்களை அரசு வரவேற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பொதுப்பிரிவினருக்கு 10ஆம் வகுப்பு முடித்திருந்தால் ₹300, பிளஸ் 2 முடித்திருந்தால் ₹400 மற்றும் பட்டப்படிப்பு (டிகிரி) முடித்திருந்தால் ₹600 வழங்கப்படுகிறது. இதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கு 10ஆம் வகுப்பிற்கு ₹600, பிளஸ் 2-விற்கு ₹750 மற்றும் பட்டப்படிப்பிற்கு ₹1,000 என உதவித்தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த உதவித்தொகையைப் பெற விரும்புவோர், தங்களது வேலைவாய்ப்பு பதிவு அட்டை, மதிப்பெண் சான்றிதழ் (மார்க் சீட்), மாற்றுச் சான்றிதழ் (TC), ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் (பாஸ்புக்) மற்றும் சாதிச் சான்றிதழ் ஆகிய தேவையான ஆவணங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நேரடியாகச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுடையவர்கள் ஆகஸ்ட் 28ஆம் தேதிக்குள் நேரில் சென்று விண்ணப்பிக்குமாறு அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…
மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…