Connect with us

TRENDING

பாகுபலி, RRR திரைப்பட ஒளிப்பதிவாளரின் மனைவி 39 வயதில் திடீர் மரணம்.. காரணம் என்ன..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ராஜமௌலி. இவர் இயக்கிய சை, பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற பிரம்மாண்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் செந்தில்குமார்.  பாகுபலி ஒன்று, இரண்டாம் பாகம் இரண்டுமே மிக பெரிய பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

   

இப்படம் மட்டுமல்லாமல் ராஜமௌலியின் சத்ரபதி, யமடோங்கா, மகதீரா, ஈ உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.  இவர் ராஜமௌலியின் ஃபேவரைட் ஒளிப்பதிவாளர் என்று கூட சொல்லலாம். ராஜமவுலியின் பல்வேறு திரைப்படங்களில் இவர் பணியாற்றியுள்ளார்.

இவரது மனைவி ரூஹி 2003ம் ஆண்டில் இருந்து யோகா பயிற்சியாளராக உள்ளார். இவர் பிரபாஸ், தமன்னா, இலியானா போன்ற பிரபலங்களுக்கும் பயிற்சி கொடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் மற்றும் ரூஹி 2000ம் ஆண்டில் காதலிக்க தொடங்கி 2009ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பல உறுப்பு செயலிழப்பு (multiple organ failure) ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். ரூஹியின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெற உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறையை சேர்ந்த பிரபலங்கள் தற்பொழுது ஒளிப்பதிவாளர் செந்தில் குமாருக்கு தங்களது இரங்கல்களை  தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading

More in TRENDING

To Top