90S களில் மிகவும் பிரபலமான நடிகைகளின் ஒருவராக வலம் வந்தவர் நடிகை மதுபாலா.’ஒத்தயாள் பட்டாளத்தில்’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.இதைத் தொடர்ந்து கே. பாலச்சந்திரன் இயக்கத்தில் வெளியான ‘அழகன்’என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.1992 ஆம் ஆண்டு வெளியான ‘ரோஜா’ படத்தில் கதாநாயகியாக நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.இப்படத்தில் அரவிந்த் சிவசாமிக்கு மனைவியாக மதுபாலா நடித்துள்ளார்.
இவர் பல முன்னணி நடிகர்ககளுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் வெளியான ‘ஜென்டில்மேன்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் .இவர் தமிழில் ஏராளமான படங்கள் நடித்துள்ளார். இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார்.இவர் அதிகமான இந்தி திரைப்பட நடிகையாக வலம் வந்துள்ளார்.
இவர் மிகப பிரபலமான நடிகர்களான அசோக் குமார், தேவ் ஆனந்த், மோகன்லால், மம்முட்டி, அக்க்ஷய் குமார், ரிஷி கபூர்,ஜீதேந்திரா, நசிருத்தீன் ஷா, அர்ஜூன், ஜாக்கி செராஃப், கோவிந்தா, அஜய் தேவ்கான், சைய்ஃப் அலி கான், நானா படேகர் எனப் பலருடன் நடித்துள்ளார். நடிகை மதுபாலா ஆனந்த் ஷா என்பவரை 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதன்பின்னர் சினிமாவில் நடிக்கவில்லை.
இவர் 2010 முதல் 11 வரை ஜெயா டிவியில் ஒளிபரப்பான செளந்தர வள்ளி என்ற சீரியல் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார். இந்நிலையில் மதுபாலா சமீபத்தில் ஒரு ஹிந்தியில் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ரோஜா பட நடிகை மதுபாலா வா இது என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…