27 லட்சம்.. மீனாவை அசிங்கப்படுத்தும் விஜயா.. மொத்த குடும்பத்துக்கும் நாமத்தை போட பிளான் போட்ட ரோகினி..

By Mahalakshmi

Published on:

விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் என்றால் அது சிறகடிக்க ஆசை தான். இந்த சீரியலுக்கான இன்றைய எபிசோடை பற்றி பார்ப்போம். ரோகியுடன் கூட்டு சேர்ந்து விஜயா மீனாவின் பூக்கடையை கார்ப்பரேஷன் ஆபீஸில் புகார் கூறி தூக்கி விடுகிறார்.இதனால் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார் மீனா. மீனாவை சமாதானப்படுத்த முத்து முயற்சி செய்து வருகிறார்.

   

மேலும் மீனாவை அவமானப்படுத்திய விஜயா வீட்டு வேலைக்கும் மட்டும்தான் நீ லாய்க்கு என்று கூறுகிறார். இதைக் கேட்ட முத்து மற்ற மருமகள்கள் ஒரு வேலையும் செய்ய மாட்டார்களா என்று கூற .அவர்கள் கை நிறைய சம்பாதிக்கிறார்கள் உன் மனைவி சும்மா வீட்ல வெட்டியா தானே இருக்கா என்று கூறி விடுகிறார் விஜயா. இதையெல்லாம் பார்த்த முத்து மீனாவின் கௌரவத்தை எப்படியாவது மீட்க வேண்டும் என்று அவருக்கு புதிய பைக் வாங்கி கொடுக்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க ரோகிணி மனோஜிடம் காணாமல் போன 27 லட்சத்தை பற்றி கேட்கிறார். உடனே நடந்த எல்லா விஷயத்தையும் மனோஜ் கூறி விடுகிறார். பிறகு ரோகிணி அவரது புத்தியை பயன்படுத்தி எப்படியாவது பணத்தை திருடிக் கொண்டு சென்ற பெண்ணை கண்டுபிடித்து 27 லட்சத்தையும் ஆட்டைய போட்டு விடலாம் என்று பிளான் செய்கிறார். அதுமட்டுமில்லாமல் விஜயா மற்றும் முத்து, ரவி கண்ணில் மண்ணைத் தூவி விட்டு எப்படியாவது அந்த பணத்தை ஆட்டைய போடவும் திட்டம் தீட்டுகிறார் ரோகிணி.

author avatar
Mahalakshmi