தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர்தான் ரோபோ சங்கர். இளம் வயதிலேயே நடிகராக வேண்டும் என்று முடிவு செய்த ரோபோ சங்கர் பட வாய்ப்புகளை தேட தொடங்கினார். விஜயகாந்தின் தர்மசக்கரம், ரஜினியின் படையப்பா உள்ளிட்ட படங்களில் கூட்டத்தோடு கூட்டமாக வந்து நிற்கும் கதாபாத்திரங்களில் நடித்த ரோபோ சங்கருக்கு 2012 ஆம் ஆண்டு விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தன்னுடைய காமெடி திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பை கிடைத்தது. அப்படி தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு படிப்படியாக முன்னேறி தமிழ் சினிமாவில் நுழைந்த ரோபோ சங்கர் பல்வேறு திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார்.
அதன் பிறகு தனுஷ் உடன் மாரி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அடுத்தடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். கடந்த வருடம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர் தற்போது மீண்டும் உடல் நலம் தேறி சினிமாவில் பிஸியாகிவிட்டார். இந்த நிலையில் ரோபோ சங்கர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனுஷ் குறித்து பேசியுள்ளார். அதில், மாரி படம் எடுத்த போது சனிக்கிழமை என்ற கதாபாத்திரத்தில் ரோபோ சங்கர் அடிக்கப் போவதாக தனுஷிடம் இயக்குனர் கூறியுள்ளார்.
உடனே ரோபோவா, அவர் ஆளு குண்டா இருப்பாரே, அவருக்கு முன்னாடி நான் ரொம்ப ஒல்லியா தெரிவேன் என்று தனுஷ் கூறியுள்ளார். அப்போ ஜோடி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதால் தனது உடலை ரோபோ சங்கர் பிட்டாக வைத்திருந்தார். மாரி படத்தில் சூட்டிங் தொடங்கிய முதல் நாளிலிருந்து கடைசி நாள் வரை காமெடிகளை செட்டிலையே ரோபோ சங்கர் உருவாக்கியுள்ளார். டப்பிங் வரை தனுஷ் எதுவுமே சொல்லவில்லை. இது நன்றாக இருக்கு ரோபோ அப்படியே இருக்கட்டும் என்று மட்டும் தனுஷ் கூறியுள்ளார். மாரி படம் வெளியாகி மூன்றாவது நாளில் தனுஷ் தனக்கு பெரிய தங்க செயின் ஒன்றை பரிசாக வழங்கினார், அதன் பிறகு என்னுடைய திருமண நாளில் தங்கத்தில் விநாயகர் டாலர் ஒன்றையும் பரிசாக கொடுத்திருந்தார், அவர் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப் பெரிய உதவிகளை செய்துள்ளார் என்ற ரோபோ சங்கர் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…