ஓய்வு பெறும் டிஜிபி சங்கர் ஜிவால்… தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்?… லிஸ்டில் இடம்பெற்ற முக்கிய அதிகாரிகள்…!

By Srimathi on ஆவணி 25, 2025

Spread the love

தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் ஓய்வை தொடர்ந்து, அடுத்த டிஜிபி யார் என்று கேள்வி பரவி வருகிறது. உத்தரகாண்டை சேர்ந்த சங்கர் ஜீவால், தமிழ்நாட்டு டிஜிபியாக பணியாற்றுவதற்கு முன்னால், சென்னையில் போலீஸ் கமிஷனராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றி வந்தார். அவரின் மகள் தவ்வி ஜீவால் தற்,போது “கராத்தே பாபு”  என்ற படத்தில் நடித்து வருவதால், ஓய்வுக்கு பின் சென்னையிலே தொடர்ந்து தங்கிவிட, சங்கர் ஜிவால் முடிவு செய்துள்ளார்.

கடந்த 2003 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டு காவல்துறை டிஜிபியாக பதவியேற்ற சங்கர் ஜீவாலின் பதவிக்காலம், வரும் 31ம் தேதியுடன் முடிவடைகின்ற நிலையில், யாருக்கு அடுத்த டிஜிபி பதவி வழங்கப்படும்? என பல எதிர்பார்ப்புகள் பரவிவருகிறது. மேலும், தமிழக போலீஸ் பயிற்சி கல்லூரி டிஜிபி சந்தீப்ராய் ரத்தோர், தீயணைப்பு துறை இயக்குனர் சீமா அகர்வால், நிர்வாகப் பிரிவு டிஜிபி வெங்கட்ராமன் உள்ளிட்டோரில் ஒருவர், அடுத்த தமிழக டிஜிபியாக பதவி ஏற்கலாம் என கருத்துக்கள் வெளியாகி வருகின்றது.