எப்படி அடைக்கலாம்…? ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற மகன்கள்…! ஓய்வு பெற்ற தாசில்தாருக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு பின்னணி…!!

Spread the love

திருச்சி மாவட்டம் தாயனூர் மேல் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி ஓய்வு பெற்ற தாசில்தார். ஓய்வுக்குப் பின் குஞ்சாயி அம்மன் கோவில் நிலமான 8 ஏக்கரில் 2 ஏக்கரை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். மீதமுள்ள நிலத்தில் கோவில் மருளாளி அசோக்குமார் மற்றும் இன்பராஜ் விவசாயம் செய்தனர். இந்த நில பிரச்சினை தொடர்பாக சுப்பிரமணிக்கும் அசோக்குமாருக்கும் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு நடந்து வருகிறது.

நேற்று மாலை சுப்பிரமணி வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அசோக்குமார் நிலத்துக்கு தண்ணீர் செல்லும் வாய்க்காலில் கற்களை வைத்து அடைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அறிந்த அசோக்குமாரின் மகன்கள் தமிழ்செல்வன் மற்றும் சூர்யா வந்து சுப்பிரமணியுடன் தகராறு செய்தனர். சுப்பிரமணி அசோக்குமார் மற்றும் அவரது மகன்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகச் சொல்லப்படுகிறது.

ஆத்திரமடைந்த அசோக்குமார் மண்வெட்டியால் சுப்பிரமணியைத் தாக்கினார். தமிழ்செல்வன் மற்றும் சூர்யா கத்தி, அரிவாளால் சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பினர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உயிரிழந்த சுப்பிரமணியின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

இதனையடுத்து தனிப்படை போலீசார் திருச்சி-தொகைமலை சாலையில் அசோக்குமார், தமிழ்செல்வன், சூர்யா ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஓய்வு பெற்ற தாசில்தார் நிலத் தகராறில் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

“உங்கள் விஜய் உங்கள் விஜய்” சென்னையே தவெக வசம்.. தலைநகரின் 16 தொகுதிகளிலும் விஜய் அதிரடி முன்னிலை..!!

தலைநகர் சென்னையே தமிழக வெற்றிக் கழகத்தின் வசமாகியுள்ளது. சென்னையில் உள்ள மொத்தமுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் அபாரமான…

2 minutes ago

“ஜஸ்ட் மிஸ்!.. பந்துக்கு ஆசைப்பட்டு இப்படி ஒரு அந்தர பல்டியா?… இணையத்தை கலக்கும் குட்டிப் பெண்ணின் ‘சறுக்கல்’ சாகசம்… வயிறு குலுங்க சிரிக்கும் நெட்டிசன்கள்”..!!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் இந்தக் காணொளி, பார்ப்பவர் நெஞ்சைப் பதறவைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒரு சிறுமி, ஓடும்…

7 minutes ago

நான் தனியா வரவா..? முதல் சுற்றிலேயே முதலமைச்சர், துணை முதலமைச்சர் பின்னடைவு… தமிழகத்தில் விஜய் அலை..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும்…

10 minutes ago

ElectionResult 2026: விஜய்யிடம் வாக்குகளை இழந்தது யார்…? 100+ தொகுதிகளில் தவெக முன்னிலை பெற்று ஆளுங்கட்சிக்கு மெகா அதிர்ச்சி…!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆளும் திமுகவிற்கு மிகப்பெரிய…

15 minutes ago

ElectionResult 2026: சொந்த மண்ணில் எடப்பாடியார் கெத்து…! 11-ல் 7 தொகுதிகளை அள்ளும் அதிமுக..நிலைகுலைந்த ஆளுங்கட்சி..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், அந்தத் தொகுதிகளின் தற்போதைய தேர்தல் நிலவரப்படி அதிமுக அமோக முன்னிலை…

19 minutes ago

கூட்டணி இல்லை.. ஆனாலும் முதலிடம்..! ஓட்டப்பிடாரத்தில் தனி ஒருவனாக மாஸ் காட்டும் கிருஷ்ணசாமி..!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தற்போதைய வாக்கு எண்ணிக்கையில்…

22 minutes ago