இசைஞானி இளையராஜாவின் அன்பு மகளான பாடகி பவதாரணி மறைந்த செய்தி கேட்டு திரை உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும் பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்கல்களை இசைஞானி இளையராஜாவிற்கு தெரிவித்து வருகின்றனர் நிலையில் இந்த வரிசையில் நடிகர் வடிவேலு பிரபல தொலைக்காட்சியில் இளையராஜாவின் மகள் இறந்த செய்தி கேட்டு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதாக ஆடியோ மூலம் பதிவிட்டுள்ளார்.
பின்னணி பாடகி பவதாரணி கடந்த ஐந்து மாதங்களாக பித்தப்பை அலர்ஜி காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் இலங்கையில் உள்ள கொழும்பூர் தனியார் வைத்தியசாலையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பவதாரணி உயிரிழந்தார். இவரின் மறைவு திரைஉலகினர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. வித்தியாசமான குரல் வளம் கொண்ட பவதாரணி தனது பாடல் மூலம் பல பாடல்களை வெற்றி பாடல்களாக திரையுலகிற்கு தந்துள்ளார்.
நடிகர் வடிவேலு வெளியிட்ட ஆடியோவில் “எனது அண்ணன் இளையராஜாவின் அன்பு மகள், தங்க மகளான பவதாரணி இறந்த செய்தி கேட்டு நான் மிகவும் நொறுங்கி விட்டதாக அதில் குறிப்பிட்டு இருந்தார். மேலும் 47 வயதான பாடகி பவதாரணி தைப்பூசம் நாளில் இறந்ததால் முருகப்பெருமானின் காலடியில் சரணடைவார் என்றும் வடிவேலு கூறியிருந்தார்.
மேலும் நடிகர் வடிவேலு தனது நெருங்கிய நண்பரான போண்டாமணி மற்றும் தன்னை திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்திய கேப்டன் விஜயகாந்த் இறப்பிற்கு கூட இரங்கல் செய்தி தெரிவிக்காத நிலையில் திரை உலகினர்களும் ரசிகர்களும் இவரை பல விமர்சனங்களுக்கு உள்ளாக்கினார்கள். மேலும் மக்களே ஆச்சரியப்படும்படி இளையராஜாவின் மகள் பவதாரணி மறைந்த செய்திக்கு ஆடியோ மூலம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார் நடிகர் வடிவேலு. இந்த செய்தி மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த மாதம் (ஏப்ரல் 2024) அமெரிக்காவின் முயற்சியால் போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இஸ்ரேலிய…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக…
உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில் உள்ள நேனுவா காம்போசிட் பள்ளியில் (Nenua Composite School), பள்ளி மாணவர்கள் வகுப்பறைகளைப்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். இருப்பினும்,…
புதுச்சேரியில் தங்கியிருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள், தாங்கள் தங்கியிருந்த சொகுசு விடுதியிலிருந்து தற்போது வேறொரு விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கியிருந்த பழைய…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மத்திய சிறையில் வாரண்ட் இன்சார்ஜ் ஆகப் பணியாற்றி வந்தவர் பிரோசா காட்டூன். இவர் தனது…