“கைதிக்கும் காதல் வரும்” சிறையில் மலர்ந்த ‘சினிமா’ பாணி காதல்.. விடுதலையான கைதியை கரம்பிடித்த சிறை அதிகாரி..!

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மத்திய சிறையில் வாரண்ட் இன்சார்ஜ் ஆகப் பணியாற்றி வந்தவர் பிரோசா காட்டூன். இவர் தனது பணியின் போது, 2007-ஆம் ஆண்டு முதல் கொலைக் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த தர்மேந்திர சிங் என்ற கைதியைச் சந்தித்துள்ளார். சிறை விதிகளுக்கு உட்பட்டுத் தொடங்கிய இவர்களது சந்திப்பு, நாளடைவில் எதிர்பாராத விதமாக காதலாக மலர்ந்தது. ஒரு சிறை அதிகாரிக்கும், கைதிக்கும் இடையே உருவான இந்த காதல் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

நீண்ட கால சிறைவாசத்திற்குப் பிறகு, தர்மேந்திர சிங் கடந்த 2021-ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலையானார். அவர் விடுதலையான பிறகு, இருவரும் தங்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடிவெடுத்தனர். இருப்பினும், மதம் மற்றும் சமூக அந்தஸ்து காரணமாக பிரோசாவின் குடும்பத்தினர் இந்தத் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, இருவரும் ஒருவரையொருவர் கைவிடாமல் உறுதியாக நின்றனர்.

இறுதியாக, அனைத்து தடைகளையும் கடந்து பிரோசாவும் தர்மேந்திர சிங்கும் தற்போது முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். சட்டத்தின் முன் குற்றவாளியாக நின்ற ஒருவரை, ஒரு அதிகாரியே காதலித்து கரம் பிடித்திருப்பது சினிமா கதையை விட சுவாரசியமாக அமைந்துள்ளது. குடும்ப எதிர்ப்பு, மத வேறுபாடு எனப் பல சவால்கள் இருந்தாலும், இவர்களது வாழ்க்கையில் ‘காதல் வென்றுள்ளது’ என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Swetha

Recent Posts

நெஞ்சே பதறுது..!! மதிப்பெண் பட்டியலை திருத்தியதால் ஆத்திரம்.. 9 வயது மகளை மின்சார ரம்பத்தால் துண்டு துண்டாக வெட்டி கொன்ற தந்தை..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில், ஒன்பது வயது சிறுமி ஒருவரை அவரது தந்தையே மின்சார ரம்பத்தால் (Chainsaw) மிகக் கொடூரமாகக் கொலை…

8 minutes ago

திடீரென டெல்லி பறந்த சி.வி.சண்முகம்… பின்னணி என்ன..? உச்சகட்ட பரபரப்பில் தமிழகம்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சியமைப்பதில் பெரும் இழுபறி நீடித்து வரும் நிலையில், அதிமுகவின் முக்கிய முகமும் எம்.பி.யுமான…

10 minutes ago

அதிர்ச்சி வீடியோ.. “உயிர் போயிடுச்சே” நோயாளி உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் … அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கிய கும்பல்..!!

மகாராட்டிர மாநிலம் உல்லாஸ்நகரில் உள்ள மத்திய அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் திடீரென உயிரிழந்தார். முறையான…

13 minutes ago

BREAKING: விஜய்யை உடனடியா CM ஆக்குங்க.. ஆளுநர் மாளிகைக்கு வெளியே பெரும் பரபரப்பு..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யை,…

15 minutes ago

தவெகவை அழைக்காமல் பாஜகவை அழைப்பீர்களா..? மக்கள் தீர்ப்பை மாற்ற முடியாது…. விஜய்க்கு ஆதரவாக ஜோதிமணி எம்பி எக்ஸ் பதிவு..!!

ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்பே இறுதியானது. 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) ஆட்சியமைக்க அழைக்காமல், வெறும்…

20 minutes ago

திடீர் பரபரப்பு..! விஜய்க்கு ஆதரவாக நாளை தமிழகம் முழுவதும் வெடிக்கும் போராட்டம்… அதிரும் அரசியல் களம்…!!

தமிழக அரசியலில் நிலவும் முட்டுக்கட்டைக்கு பாஜகவே காரணம் என காங்கிரஸ் கட்சி நேரடியாகக் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாகத் தமிழ்நாடு காங்கிரஸ்…

26 minutes ago