“கைதிக்கும் காதல் வரும்” சிறையில் மலர்ந்த ‘சினிமா’ பாணி காதல்.. விடுதலையான கைதியை கரம்பிடித்த சிறை அதிகாரி..!

By Swetha on வைகாசி 7, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மத்திய சிறையில் வாரண்ட் இன்சார்ஜ் ஆகப் பணியாற்றி வந்தவர் பிரோசா காட்டூன். இவர் தனது பணியின் போது, 2007-ஆம் ஆண்டு முதல் கொலைக் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த தர்மேந்திர சிங் என்ற கைதியைச் சந்தித்துள்ளார். சிறை விதிகளுக்கு உட்பட்டுத் தொடங்கிய இவர்களது சந்திப்பு, நாளடைவில் எதிர்பாராத விதமாக காதலாக மலர்ந்தது. ஒரு சிறை அதிகாரிக்கும், கைதிக்கும் இடையே உருவான இந்த காதல் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

நீண்ட கால சிறைவாசத்திற்குப் பிறகு, தர்மேந்திர சிங் கடந்த 2021-ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலையானார். அவர் விடுதலையான பிறகு, இருவரும் தங்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடிவெடுத்தனர். இருப்பினும், மதம் மற்றும் சமூக அந்தஸ்து காரணமாக பிரோசாவின் குடும்பத்தினர் இந்தத் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, இருவரும் ஒருவரையொருவர் கைவிடாமல் உறுதியாக நின்றனர்.

   

இறுதியாக, அனைத்து தடைகளையும் கடந்து பிரோசாவும் தர்மேந்திர சிங்கும் தற்போது முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். சட்டத்தின் முன் குற்றவாளியாக நின்ற ஒருவரை, ஒரு அதிகாரியே காதலித்து கரம் பிடித்திருப்பது சினிமா கதையை விட சுவாரசியமாக அமைந்துள்ளது. குடும்ப எதிர்ப்பு, மத வேறுபாடு எனப் பல சவால்கள் இருந்தாலும், இவர்களது வாழ்க்கையில் ‘காதல் வென்றுள்ளது’ என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.