BREAKING: அதிமுகவில் இருந்து விலகினார்… காலையிலேயே இபிஎஸ்-க்கு ஷாக்….!

By Nanthini on வைகாசி 10, 2026

Spread the love

சேலம் மாநகர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் கார்த்திக், தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளது அக்கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனிப்பட்ட பணிச்சுமை காரணமாகவே தான் இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறி, தனது ராஜினாமா கடிதத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் அனுப்பியுள்ளார்.

இருப்பினும், சமீபத்திய தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதால் அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் நிலவும் கடும் அதிருப்தியே இந்த விலகலுக்குப் பின்னணியில் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். கட்சியின் தற்போதைய சூழலில் கார்த்திக்கின் இந்த விலகல், சேலம் அதிமுகவில் மற்றுமொரு பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.