கட்சி நிர்வாகிகளை செல்போனில் தொடர்பு கொண்டால் சிலர் மதிப்பதில்லை, ஒரு வணக்கம் கூட சொல்வதில்லை என்று நயினார் நாகேந்திரன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். பாஜக தலைவர் ஆன பிறகும் கட்சியில் அவருக்கு உரிய மரியாதை இல்லை என பேசப்படும் நிலையில் நயினார் நாகேந்திரனின் பேச்சு அதனை உறுதிப்படுத்தியுள்ளது. இப்படியான நிலையில் தலைவர் பதவியில் இருந்து விலகி அரிய அணையை அண்ணாமலைக்கு கொடுங்கள் என சிலர் கருத்து கூறி வருகிறார்கள். இதனால் பாஜக தலைவர் பதவியில் இருந்து நயினார் நாகேந்திரன் விலக உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
