RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, இன்னும் சற்றுநேரத்தில் நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் ரெப்போ ரேட் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார். மூன்று நாள்களாக நடைபெற்ற MPC கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அவர் வெளியிட இருக்கிறார். இதில், ரெப்போ விகிதத்தை 0.25 புள்ளிகள் குறைக்கவும் அல்லது 5.5% அளவிலேயே தொடரவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ரெப்போ வட்டி விகிதம் குறைந்தால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும்.
