காலையிலேயே பரபரப்பு…. மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி…. ஒரே போடாய் போட்ட ஓபிஎஸ்….!

By Nanthini on தை 28, 2026

Spread the love

அ.தி.மு.க.வின் அனைத்து பிரிவுகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதே தற்போதைய முக்கியத் தேவை என்றும், தான் மீண்டும் கட்சியில் இணைவது என்பது இறைவனின் கையில் உள்ளது என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்த அவர், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார். பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வின் பல்வேறு சக்திகள் மீண்டும் ஒருங்கிணைய வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அ.தி.மு.க.வில் மீண்டும் இணைவது குறித்து டி.டி.வி.தினகரன் உங்களிடம் பேசினாரா? என்ற கேள்விக்கு, இதுவரை அவர் உள்ளிட்ட யாரும் தன்னைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்று ஓ.பி.எஸ். விளக்கமளித்தார். மேலும், நடிகர் விஜய் அ.தி.மு.க.வை ஊழல் கட்சி என்று விமர்சித்தது குறித்துக் கேட்டபோது, அது தொடர்பான கேள்விகளுக்கு உரிய நேரத்தில் பதில் அளிக்கப்படும் என்று கூறிவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.