அட கொடுமையே… ரீல்ஸ் போட்டா பெரிய ஆளாடா?… ஆன்லைன் கேம் தகராறில் பாய்ந்த கத்தி… இளைஞரை வெட்டிய ரீல்ஸ் ஸ்டார்… துணை முதல்வர் அதிரடி உத்தரவு…!!

By Swetha on புரட்டாதி 15, 2026

Spread the love

ஆன்லைன் விளையாட்டுத் தகராறில் புனேவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்தார். சோஷியல் மீடியா ‘ரீல்ஸ் ஸ்டார்’ என அறியப்படும் நபர் ஒருவர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. படுகாயமடைந்த அந்த இளைஞர் தற்போது தீவிர சிகிச்சைக்குப் பின் சீரான உடல்நிலையுடன் உள்ளார்.

பாதிக்கப்பட்ட இளைஞரின் பெற்றோர்கள், துணை முதல்வர் சுனேத்ரா பவாரை மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நேரில் சந்தித்து நீதி கோரினர். மேலும், இச்சம்பவம் தொடர்பான ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் சமூக வலைதள லிங்குகளை ஆதாரமாக அவரிடம் சமர்ப்பித்தனர். அதோடு, குற்றஞ்சாட்டப்பட்ட சில நபர்கள் மீது ஏற்கனவே மும்பையின் போவாய் காவல்நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.

   

குடும்பத்தினரின் புகாரைக் கேட்ட சுனேத்ரா பவார், புனே மாநகரக் காவல் ஆணையர் அமிதேஷ் குமாரை உடனடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், இளைஞர்களிடையே வன்முறைத் தூண்டும் ஆன்லைன் விளையாட்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவது குறித்துக் கவலை தெரிவித்த அவர், இதுபோன்ற தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் விளையாட்டுகளைக் கட்டுப்படுத்தக் கடுமையான நடவடிக்கைகள் தேவை என்றும் வலியுறுத்தினார்.