ரவிமோகன் தனது தயாரிப்பு நிறுவனத்தின் அறிமுக விழாவை பிரம்மாண்டமாக நடத்தினார். இந்த விழாவிற்கு சிவராஜ்குமார், சிவகார்த்திகேயன் யோகி பாபு உள்ளிட்ட பிரபலங்கள் வந்தனர். ரவி மோகன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடங்கிய அன்று இரண்டு படங்களை தயாரிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. அதில் ஒன்று ப்ரோ கோட்.
இந்த படத்தில் ரவி மோகன் எஸ்.ஜே சூர்யா, அர்ஜுன் அசோகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் புரோ கோட் படத்தை எடுக்கப் போவதாக கூறப்படுகிறது.
இதில் ரவி மோகனின் சம்பளம் 25 கோடி. எஸ் ஜே சூர்யா வின் சம்பளம் 10 கோடி. மீதி 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படத்தை எடுப்பார்கள் என கூறப்படுகிறது. ரவி மோகனைப் பொறுத்தவரை 70 கோடி ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை. அவருக்கு பெரிய அளவில் வியாபாரம் கிடையாது. அப்படி இருக்கும் போது 70 கோடி ரூபாய் பணத்தை போட்டால் அவருக்கு லாபகரமாக அமையுமா என்ற கேள்வி எழுகிறது.
கத்து வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்சியர்களிடம் ரவி மோகன் தரப்பில் இருந்து பணம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. மகன் எடுத்த உடனே அகலக்கால் வைக்கிறாரே என்ற கோபத்தில் தான் அவரது அப்பா மோகன் அறிமுக விழாவில் கூட கலந்து கொள்ளவில்லை. இந்த விவகாரத்தை பற்றி தான் திரை உலகில் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் (Kasganj) பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக அண்ணிக்கும் அவரது நாத்தனாருக்கும் இடையே ஏற்பட்ட சாதாரண…
2026 நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்குப் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தனது…
திறன் பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு மட்டுமே தனது கட்சியில் பதவி வழங்க கே. அண்ணாமலை முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.…
திருவள்ளூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகத்தின் இளைய மகன் தீபக் (26), ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு…
"எல்லாவற்றிற்கும் திமுக தான் காரணம் என்று நீங்கள் கூறுவதாக இருந்தால், பிறகு ஏன் நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்? உங்கள் கைகளில்…
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதி மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வார்டன் மீது போலீசார்…