இவர்களின் ரேஷன் கார்டு ரத்து… இனி எந்த பொருளும் வாங்க முடியாது… அரசு ஷாக் நியூஸ்…!

By Nanthini on ஆடி 25, 2025

Spread the love

ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்பங்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. நாட்டிலுள்ள ஏழை எளிய மக்கள் ரேஷன் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் மக்களுக்கு மலிவு விலையிலும் இலவசமாகவும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ரேஷன் கார்டு வைத்துள்ள பயனாளிகளுக்கு மட்டும் தான் இந்த பொருட்கள் கிடைக்கின்றன. இதனைத் தவிர அரசு வழங்கும் பல உதவிகளையும் ரேஷன் கார்டு வைத்துள்ள பயனாளிகள் மட்டும் தான் பெற முடியும்.

இப்படியான நிலையில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்கள் கடந்த ஆறு மாதங்களாக ரேஷன் பொருட்களை வாங்கவில்லை என்றால் அவருடைய ரேஷன் கார்டு செயல் இழக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. இனி அவர்களுக்கு அரசிடம் இருந்து இலவச உணவு தானியங்கள் அல்லது பிற அரசு திட்டங்களின் பலன்கள் எதுவும் கிடைக்காது. நீண்டகாலமாக ரேஷன் பொருட்கள் வாங்காதவர்கள் அல்லது அவர்களின் ரேஷன் கார்டுகள் போலியானவை அல்லது நகல் அட்டைகளாக இருக்கலாம் என்பதை சரி பார்ப்பதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

   

அதன்படி ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரரும் ஆன்லைன் கேஒய்சி சரிபார்ப்பை முடித்திருக்க வேண்டும். இதில் ரேஷன் கார்டு ஆதாரத்துடன் இணைக்கப்படும். பயனாளிகளின் பயோமெட்ரிக் சரிபார்ப்பு செய்யப்படும். நாடு முழுவதும் 23 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷன் கார்டில் கேஒய்சி அப்டேட் முடிப்பது என்பது அவசியமாகும். இதுவரை கேஒய்சி அப்டேட் செய்யாதவர்கள் உடனே செய்து விடுவது நல்லது. இல்லையென்றால் உங்களுடைய ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டு பொருட்கள் எதுவும் கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்படக்கூடும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.