பாஜகவுக்கு தண்ணி காட்டும் ரங்கசாமி.. அமித்ஷாவிடம் தஞ்சம் புகுந்த நமச்சிவாயம்.. இலாகா ஒதுக்கீட்டில் இழுபறி..!!

Spread the love

புதுச்சேரியில் தேஜ கூட்டணி ஆட்சியமைத்து ஒரு மாதம் ஆகப் போகும் நிலையிலும், அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு மற்றும் சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடத்துவதில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. நமச்சிவாயத்திற்கு உள்துறை வழங்க முடியாது என்றும், லட்சுமி நாராயணனுக்கு (லஜக ஜோஸ் மார்ட்டின்) அமைச்சரவையில் இடமில்லை என்றும் முதலமைச்சர் ரங்கசாமி பிடிவாதமாக இருப்பதால் பா.ஜ.க டெல்லி தலைமை அதிருப்தியில் உள்ளது. பா.ஜ.க தேசியத் தலைவர்கள் பலமுறை நேரில் பேச்சுவார்த்தை நடத்தியும் ரங்கசாமி பிடிகொடுக்காமல் மழுப்பி வருவதால், நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அமைச்சரவை விரிவாக்கம் காலதாமதமாகி வருகிறது.

இந்தச் சூழலில், செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் யார் என்பது விரைவில் தெரியவரும் என்றும், அடுத்த வாரம் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு யாருக்கு எந்த துறை என்பது அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்காததால் அரசுப் பணிகள் எதுவும் முடங்கவில்லை என்றும், தான் ஏற்கனவே 20 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், பா.ஜ.க அமைச்சர் நமச்சிவாயம், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அழைப்பின் பேரில் அவசரப் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று மாலை அமித்ஷாவைச் சந்திக்கும் அவர், புதுச்சேரி பா.ஜ.க அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு மற்றும் சபாநாயகர் பதவி விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, இறுதி முடிவு எடுப்பதற்காக அமித்ஷா, முதலமைச்சர் ரங்கசாமியிடம் தொலைபேசி மூலம் பேசி இப்பிரச்சினைக்குத் தீர்வு காணத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Soundarya

Recent Posts

இனிமே எவனும் ஏமாத்த முடியாது!.. ஸ்கேன் பண்ணா மொத்த ஜாதகமும் அவுட்.. இன்று முதல் அமலுக்கு வந்த புதிய UPI ரூல்.. ஆன்லைன் திருடர்களை அலறவிட்ட மத்திய அரசின் புதிய அதிரடி..!!

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் நடக்கும் மோசடிகளுக்கும், கவனக்குறைவால் தவறான நபர்களுக்குப் பணம் மாறுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இன்று (ஜூன்…

6 minutes ago

“அவனை என் கையில் கொடுங்க” துண்டு துண்டாகக் கிழிச்சிடுவேன்… ஒன்றரை வயதுக் குழந்தையைப் பறிகொடுத்த தாயின் நெஞ்சை உலுக்கும் கோபம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், விராஜ் (என்ற ஜித்தேந்திர பதக்) என்ற இளைஞன், ஒன்றரை வயதுக் குழந்தையான ஆரவ்வை…

6 minutes ago

“அண்ணாமலை பதில் சொல்லியே ஆகணும்” தனிக்கட்சி தொடங்குகிறரா..? பாஜக போட்ட உத்தரவு..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புதிய கட்சி ஒன்றைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் வெறும் வதந்தி என்று பாஜக…

15 minutes ago

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2000 உதவித்தொகை கிடையாது..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

மாற்றுத்திறனாளிகளுக்கான ₹2,000 உதவித்தொகைத் திட்டத்தில் புதிய சிக்கல் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் எந்தவித முறையான காரணமும் இன்றி…

24 minutes ago

“அப்போ எல்லாமே உண்மையா..?” உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி.? டுவிஸ்ட் வைத்த வைகோ… செம அப்செட்டில் ஸ்டாலின்…!!

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் முக்கிய சூசகமான தகவலை வெளியிட்டுள்ளார். உள்ளாட்சித் தேர்தல்…

32 minutes ago

அண்ணாமலையின் புதிய கட்சியின் பெயர் இதுவா…? ஷாக் ஆன பாஜக மேலிடம்… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அக்கட்சியிலிருந்து விலகி புதிய கட்சி ஒன்றைத் தொடங்குகிறார் என்ற தகவல் சமூக ஊடகங்களில் (SM)…

37 minutes ago