![asd - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2024/06/asd.jpg)
CINEMA
அந்த படத்தை நான் வேற ஹீரோவ வச்சி பண்ணிக்கவா?.. K S ரவிக்குமார் கேட்டதால் டென்ஷன் ஆன ரஜினி… அப்ப ராணா கண்டிப்பா வருமா?
தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு மிகச்சிறிய வேடமே அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார்.
1980 கள் வரை அவர் வில்லனாகவும், கமல், சிவகுமார் மற்றும் ஜெய் சங்கர் ஆகியோரின் படங்களில் இரண்டாவது கதாநாயகனாகவும் நடித்து வந்தார். முரட்டுக் காளை உள்ளிட்ட சில படங்களின் வெற்றியால் அவர் வசூல் மன்னனாக சூப்பர் ஸ்டாராக மாறினார்.
ரஜினி இதுவரை 169 படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்து ட்ராப் ஆன படங்கள் வெகு சிலவே. அதில் ஒன்றுதான் ராணா. அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிய அன்றே ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அந்த படம் தொடங்கப்படவே இல்லை. செண்ட்டிமெண்ட் காரணமாக ரஜினி அந்த படத்தில் நடிக்க விரும்பவில்லை என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் கதாசிரியர்களில் ஒருவரான ரமேஷ் கண்ணா ராணா படத்தை எப்படியும் ரஜினி நடிப்பார். ஆனால் இப்போதைக்கு தள்ளிவைத்துள்ளார் என்றுதான் நினைக்கிறேன். இந்த படத்தை ‘நான் சிரஞ்சீவியை வைத்து எடுத்துக் கொள்ளவா?’ எனக் கே எஸ் ரவிக்குமார் ரஜினியிடம் கேட்டுள்ளார்.
அதற்கு ரஜினி முறைத்துப் பார்த்து “கூடாது. எப்ப இருந்தாலும், நான்தான் நடிப்பேன்” என உரிமையோடு சொல்லியுள்ளார். அதனால் கண்டிப்பாக ராணா வரும் என ரமேஷ் கண்ணா கூறியுள்ளார்.