தமிழ் சினிமாவில் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற படம் பார்க்கிங். இந்த படத்தின் அபார வெற்றிக்கு பிறகு அவர் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் எஸ்டிஆர் 47 படத்தை டைரக்ட் செய்ய கமிட் ஆனார். டான் பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்த நிலையில் சில காரணங்களால் அந்த படம் டிராப் ஆனது. பிறகு அரசன் படத்தில் நடிக்க சிம்பு கமிட் ஆகி விட்டார்.
அதன்பிறகு ராம்குமார் பாலகிருஷ்ணன், நடிகர் ரஜினிகாந்திடம் கதை சொன்னார். எஸ்டிஆர் 47 படத்துக்காக சிம்புவிடம் சொன்ன அதே கதையை ரஜினிக்கு ஏற்றது போல சில மாற்றங்கள் திருத்தங்கள் செய்து சொன்ன நிலையில் ரஜினி நோ சொல்லி விட்டார். இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். சிம்பு மற்றும் ரஜினியிடம் சொன்ன அதே கதையை சில மாற்றங்களுடன் சொல்லி எஸ்கேவிடம் ஓகே வாங்கியிருக்கிறார். ஒரே கதையை 3 ஹீரோக்களிடம் இயக்குனர் சொன்னது ரசிகர்களிடம் பேசுபொருளாகி உள்ளது.
