குடும்பத்துடன் விஜய்யை மீட் பண்ண ரம்பா.. பாக்கவே செம்ம கியூட்டா இருக்கே.. வைரலாகும் புகைப்படங்கள்..

By Mahalakshmi on ஜூலை 17, 2024

Spread the love

நடிகை ரம்பா குடும்பத்துடன் நடிகர் விஜய்யை சந்தித்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது .  90’ஸ் காலகட்டத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ரம்பா. 1992 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் பிரபு நடிப்பில் வெளிவந்த உழவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

   

இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில் செங்கோட்டை, சுந்தர புருஷன், ராசி, உனக்காக எல்லாம் உனக்காக, உன்னிடம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த அஜித், விஜய், சூர்யா, பிரபு, சத்யராஜ், முரளி உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்தார்.

   

 

கடைசியாக பெண் சிங்கம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். பின்னர் இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் டொரண்டோவில் செட்டிலான ரம்பா 3 குழந்தைகளை பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார். பெரும்பாலும் வெளிநாடுகளிலேயே இருந்து வரும் ரம்பா அவ போது நேரம் கிடைக்கும் போது தமிழ்நாட்டிற்கு வந்து செல்வார்.

அவரது தோழிகளான சினேகா, மீனா ,மகேஸ்வரி, சங்கீதா உள்ளிட்ட நடிகைகளுடன் நேரம் செலவிடுவார். சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வபோது தனது குழந்தைகளுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது நடிகர் விஜய்யை அவரது இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்து இருக்கின்றார்.

#image_title

அங்கு கணவர் மற்றும் குழந்தைகளுடன் குடும்பமாக சென்றிருந்த அவர் விஜயுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டது மட்டும் இல்லாமல் விஜய் உடன் குடும்பமாக நேரத்தை செலவிட்டிருக்கிறார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.