தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி செயல்பட்டு வர பாமகவில் மட்டும் மோதல் போக்க நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தந்தை மற்றும் மகன் இடையேயான மோதல் தற்போது உச்சத்தை எட்டியுள்ள நிலையில் கட்சி யார் பக்கம் உள்ளது என்று தெரியாமல் தொண்டர்கள் குழம்பி வருகிறார்கள். இப்படியான நிலையில் சேலத்தில் இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ராமதாஸ் தரப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு அன்புமணியை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
அது மட்டுமல்லாமல் மகன் அன்புமணியை ராமதாஸ் கடுமையாக விமர்சித்தது மட்டுமல்லாமல் மனம் வருந்தியும் கண்ணீர் சிந்தியவாறு பேசி இருந்தார். மேலும் இந்த பொதுக்குழுவில் பேசிய காந்திமதி, ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கூறியுள்ளார். அத்துடன் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையையும் அவர் முன் வைத்துள்ளார். இதனால் ராமதாஸ் தரப்பு அறிவாலயம் (திமுக) செல்லும் என கூறப்பட்ட நிலையில் அதிகாரத்தில் பங்கு என்று அழைப்பை வாசலிலேயே வைத்திருக்கும் தமிழக வெற்றி கழகம் பனையூர் நோக்கி செல்கிறதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்தப் விவகாரம் தற்போது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…