தமிழக அரசியலில் அதிரடி மாற்றமாக, வரவிருக்கும் தேர்தலை சசிகலாவுடன் இணைந்து சந்திக்க பாமக நிறுவனர் ராமதாஸ் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக கூட்டணியில் இணைவதற்கு அன்புமணி ராமதாஸ் தரப்பில் முட்டுக்கட்டை போடப்பட்டதாலும், திமுக கூட்டணியில் இணையத் தொண்டர்களிடையே உடன்பாடு இல்லாததாலும், ஒருகட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்கலாம் எனப் பேச்சுக்கள் எழுந்தன.
இருப்பினும், நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட திடீர் முடிவின்படி, சசிகலாவுடன் கைகோர்த்து வட மாவட்டங்களில் உள்ள 40 தொகுதிகளில் பலப்பரீட்சை நடத்த ராமதாஸ் திட்டமிட்டுள்ளாராம்; இந்த புதிய கூட்டணி நகர்வு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
