Categories: CINEMA

ரஜினிக்கு திருப்புமுனையாக அமைந்த படம்… ரிலீஸ் சிக்கலுக்கு பெரும் உதவி செய்த கமல்- பலரும் அறியாத தகவல்!

தமிழ் சினிமாவுக்கு எம் ஜி ஆரால் அழைத்து வரப்பட்டவர் மகேந்திரன். தங்கள் கல்லூரி விழாவில் எம் ஜி ஆர் முன்பு தமிழ் சினிமாவைக் காட்டமாக விமர்சித்து அவரின் கவனத்தை ஈர்த்தார். அதன் பின்னர் சென்னை வந்து துக்ளக் பத்திரிக்கையில் பணியாற்றிய போது அவரை அடையாளம் கண்டுகொண்டு அவரை சினிமாவுக்கு அழைத்து வந்து கதை வசனம் எழுத வைத்தார்.

தங்கப்பதக்கம் உள்ளிட்ட பல படங்களுக்கு கதை வசனம் எழுதிய மகேந்திரன் முதல் முதலாக முள்ளும் மலரும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். உமா சந்திரனனின் முள்ளும் மலரும் நாவலை திரைக்கதையாக்கி தயாரிப்பாளர் வேணு செட்டியாரிடம் கொடுத்துள்ளார். திரைக்கதை அவருக்குப் பிடிக்கவே படத்தைத் தொடங்கலாம் எனக் கூறியுள்ளார்.

ஆனால் படத்தின் முக்கியக் கதாபாத்திரமான அந்த காளி கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கப் போகிறீர்கள் எனக் கேட்டுள்ளார். அதற்கு மகேந்திரனோ ரஜினிகாந்த் என பதிலளித்துள்ளார். அதைக் கேட்டு ஷாக் ஆன வேணு செட்டியார் “உங்களுக்கு என்ன பைத்தியமா? வில்லனாக நடித்து வரும் அவரை எப்படி அந்த கதாபாத்திரத்தில் ரசிகர்கள் ரசிப்பார்கள். அதுமட்டுமில்லாமல் அவர் கருப்பாக வேறு இருக்கிறார்” எனக் கூறியுள்ளார். அதன் பிறகு அவர் ஒருவழியாக சம்மதிக்க படப்பிடிப்பு நடந்துள்ளது.

தான் கதை வசனம் எழுதிய படங்களில் தேவைக்கதிகமாக வசனத்தை பயன்படுத்தியதாக ஒரு குற்றவுணர்ச்சி மகேந்திரனுக்கு இருந்துள்ளது. அதனால் அவர் தான் இயக்கிய படத்தில் விஷ்வல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படமாக்கியுள்ளார். எடுத்த வரையிலான காட்சிகளைப் பார்த்த தயாரிப்பாளர்  படம் தேறாது என்ற முடிவுக்கு வந்துள்ளார். அதனால் மீதிக் காட்சிகளை படமாக்க பணம் தர முடியாது எனக் கூறியுள்ளார்.

அப்போது மனதளவில் உடைந்து போன மகேந்திரன் நடந்ததை எல்லாம் தன்னுடைய நெருங்கிய நண்பரான கமல்ஹாசனிடம் சொல்லி புலம்பியுள்ளார். மகேந்திரனின் திறமை மேல் அபார நம்பிக்கைக் கொண்டிருந்த கமல்ஹாசன் “மீதமுள்ள காட்சிகளைப் படமாக்க நான் பணம் தருகிறேன்” என சொல்லி ஷூட்டிங்குக்கு ஏற்பாடு செய்துள்ளார். அதன்பிறகுதான் செந்தாழம்பூவில் பாடலையும் சில காட்சிகளையும் படமாக்கி முடித்துள்ளார் மகேந்திரன். இதைப் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு மேடையில் கூறி கமலுக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் மகேந்திரன்.

vinoth

Recent Posts

ஹாப்பி பர்த்டே என் அன்பு பொண்டாட்டி.. திருமணத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள்.. கணவருடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய இந்திரஜா..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரோபோ சங்கர். கலக்கப்போவது யாரு என்று நிகழ்ச்சியில்…

1 hour ago

லேடி கெட்டப்பில் அச்சு அசல் பெண் போல இருக்கும்.. இந்த பிரபல தொகுப்பாளர் யார் தெரியுமா ..? வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் தொலைக்காட்சி தொகுப்பாளராக வளம் பெறுபவர் ஆசார். தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த…

2 hours ago

ஆசியாவிலேயே மிகப்பெரிய தியேட்டர்… மதுரையின் ‘சினிமா பேரடைஸோ’ தங்கம் தியேட்டரின் பிறப்பும் இறப்பும்… பலரும் அறியாத தகவல்கள்!

தமிழக மக்கள் ஆரம்ப காலம் முதலே இயல் இசை நாடகம் என கலைகளை ஊக்குவித்து வந்தவர்கள். ஒரு கட்டத்தில் மற்ற…

2 hours ago

கார் விபத்தில் உயிரிழந்த நடிகை.. துக்கம் தாங்காமல் காதலர் தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பிரபல தெலுங்கு சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கார் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது…

2 hours ago

“சுசித்ராவோட அப்பா அம்மா தற்கொலை பண்ணிக்கிட்டாங்க… கார்த்திக் அப்படிப்பட்டவர்னு கண்டுபிடிக்க இவ்ளோ வருஷம் ஆச்சா?” – கஸ்தூரி சரமாரி கேள்வி!

தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக  வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார்.…

2 hours ago

50 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருக்கும் நடிகை சித்தாரா… அந்த பிரபல நடிகர் மேல் கொண்ட காதல்தான் காரணமா?

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போலவே இருந்து 80‘களின் இளைஞர்களை மனதைக் கொள்ளை கொண்ட நடிகை தான் சித்தாரா. 1986…

3 hours ago