டீக்கடை வைத்து பிழைப்பு நடத்தும் ரஜினி பட நடிகை… அவரே சொன்ன காரணம்..!

By Soundarya on மார்கழி 24, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. இவரும் பிரபுவும் சேர்ந்து குரு சிஷ்யன் திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து இருவரும் சந்திரமுகி திரைப்படத்தில் ஒன்றாக நடித்த நிலையில் அந்த படமும் சூப்பர் ஹிட் கொடுத்தது. பாண்டியனும் இந்த திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருப்பார். குரு சிஷ்யன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கௌதமியும், பிரபுவுக்கு ஜோடியாக சீதாவும் நடித்திருந்தனர்.

   

மேலும் சோ, ஆச்சி மனோரமா மற்றும் வினு சக்கரவர்த்தி என பிரபலங்கள் பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்த அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட். ஜிங்கிடி ஜிங்கிடி, நாற்காலிக்கு சண்டை, வா வா வஞ்சி மலரே ஆகிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்னர். இந்த திரைப்படத்தில் ரஜினியின் அப்பாவாக செந்தாமரை என்பவர் நடித்திருந்தார். அதனைப் போலவே அம்மாவாக பத்மஸ்ரீ என்பவர் நடித்திருந்தார். இந்நிலையில் ரஜினியுடன் நடித்த பத்மஸ்ரீ அவர்கள் தற்போது சென்னையில் ஒரு டீக்கடை வைத்து நடத்தி வருகின்றாராம். அதுவும் ஆறு வருடமாக டீக்கடை நடத்தி வருகிறாராரம். சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அவர் பேசியதாவது, “என் அப்பா இறப்புக்கு பின் குடும்பத்தை நடத்த கஷ்டமாகிடுச்சி.

   

 

எங்கப்பா டாக்குமெண்ட்ரி பிலிம் எடுப்பாரு. அதுக்கப்புறம் தான் குடும்ப சூழ்நிலை காரணமா தான் சினிமாவுல இறங்குனேன். அதுக்கப்புறம் டீ கடை பிஸினஸ்ல இறங்கினேன். டீக்கடையில் பட்டுப்புடவை கட்டிட்டு தான் இருப்பேன். 10 ரூபா டீக்கு பட்டுப்புடவை கட்டுற ஆளு நான்தான். எல்லாரும் எனக்கு குட் மரனிக் சொல்வான். முன்னாள் நடிகை டீக்கடை நடத்துவதால் ஏதோ சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கஷ்டப்படுறேன்னு நீங்க நினைக்காதீங்க, கடவுளின் அருளால் என்னிடம் எல்லா வசதிகளும் உள்ளது. வீட்டில் சும்மா இருக்க பிடிக்காம தான் டீக்கடை நடத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.