RAIN ALERT: இன்று இரவு 10 மணி வரை.. இந்த 20 மாவட்டங்களில் மழை வெளுக்கப்போகுது…!!

By Soundarya on கார்த்திகை 5, 2025

Spread the love

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ஒருசில இடங்களில் லேசானது முதல் கனமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று  இரவு 10 மணி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி காஞ்சிபுரம், மதுரை, சிவகங்கை, திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விருதுநகர், செங்கல்பட்டு, சென்னை, தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, தேனி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.