தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ‘தளபதி’ விஜய் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இடையிலான சந்திப்பு குறித்த சமூக வலைதளப் பதிவுகள், இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. சென்னையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பங்கேற்ற ராகுல் காந்தி, விஜய்யுடன் உரையாடிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்தப் பதிவுகள் வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான விருப்பங்களைப் பெற்று வைரலாகின.
இந்தச் சூழலில், ராகுல் காந்தி பதிவிட்ட ‘ரீல்ஸ்’ வீடியோவை இன்ஸ்டாகிராம் நிறுவனம் திடீரென முடக்கியதாக காங்கிரஸ் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இது தொடர்பாகப் பேசிய காங்கிரஸ் தலைவர் சசிவத்சா, ராகுல் – விஜய் சந்திப்பு வீடியோ 12 மில்லியன் பார்வைகளையும், புகைப்படப் பதிவு 46 மில்லியன் மக்களையும் சென்றடைந்த நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) விதிகளின்படி இந்த வீடியோ முடக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இது திட்டமிட்ட நடவடிக்கை என காங்கிரஸ் தரப்பில் விமர்சிக்கப்பட்டது.
இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் இந்தக் குற்றச்சாட்டை அரசு வட்டாரங்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளன. ராகுல் காந்தியின் பதிவுகள் முடக்கப்பட்டதில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இன்ஸ்டாகிராம் தளத்தின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்தத் தவறு நடந்ததாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்காலிகமாக மறைக்கப்பட்ட அந்த வீடியோக்கள் பின்னர் தானாகவே மீட்டெடுக்கப்பட்டதாகவும் அரசுத் தரப்பு தெரிவித்தது.
இந்த விவகாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், தனது இன்ஸ்டாகிராம் பதிவு முடக்கப்பட்டதற்கான ஸ்கிரீன்ஷாட்டை ராகுல் காந்தி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்ற நிகழ்வை விட, அவருடன் ராகுல் காந்தி எடுத்துக்கொண்ட செல்பி மற்றும் உரையாடல் வீடியோக்கள் முடக்கப்பட்ட விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்திலும், இணையவாசிகளிடையேயும் பேசுபொருளாக மாறியுள்ளது.
அமெரிக்கா முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் நிராகரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் மீண்டும் சூழத்…
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ஹர் கி பௌடியில், உயிருடன் இருக்கும் தனது மனைவிக்கு ஒரு நபர் அடையாளப்பூர்வமாக இறுதிச்சடங்குகளைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எம்.எல்.ஏ-க்களின் பின்னணி குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அசோசியேஷன்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்…
கேரளாவைச் சேர்ந்த தம்பதியினர், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யைச் சந்திப்பதற்காக சுமார் 650 கிலோமீட்டர் நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ள செய்தி…
உத்தரப் பிரதேசத்தின் பாந்தா மாவட்டத்தில் உள்ள பான்டா பகுதியில், நில விற்பனை தொடர்பான குடும்பத் தகராறில் ஒரு நபர் தனது…