உத்தரப் பிரதேசத்தின் பாந்தா மாவட்டத்தில் உள்ள பான்டா பகுதியில், நில விற்பனை தொடர்பான குடும்பத் தகராறில் ஒரு நபர் தனது சொந்தத் தாயையும் தம்பியையும் கோடாரியால் வெட்டிக் கொலை செய்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட தினேஷ், தனது தாயார் நிலத்தை விற்பனை செய்து அந்தப் பணத்தை தம்பிக்குக் கொடுக்கத் திட்டமிட்டதை அறிந்து ஆத்திரமடைந்து இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
உலகமே அன்னையர் தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில், தினேஷ் தனது தாய் மற்றும் தம்பியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், மறைத்து வைத்திருந்த கோடாரியை எடுத்து இருவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோட முயன்ற கொலையாளி தினேஷை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஒரு சிறிய நிலப் பிரச்சனைக்காகப் பெற்ற தாயையும் உடன் பிறந்த தம்பியையும் கொலை செய்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம் வயதிலேயே ஏற்படும் கை நடுக்கம் பலருக்கும் கவலையை ஏற்படுத்தினாலும், இது பெரும்பாலும் நமது வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும்…
உத்தரப் பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டம் பில்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், திருமணமான இளம் பெண் ஒருவர் மர்மமான…
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள கெஜா கிராமத்தில், விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுவன் மீது கனமான இரும்பு கேட்…
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் சாதி மறுப்புத் திருமணத்தால் ஏற்பட்ட ஆத்திரத்தில், கர்ப்பிணிப் பெண்ணை அவரது கொழுந்தனே சுட்டுக்கொலை செய்துள்ள…
இன்றைய காலக்கட்டத்தில் விலையுயர்ந்த ஹெல்மெட்கள் திருடப்படுவது ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. மக்கள் பாதுகாப்பிற்காக 1,500 முதல் 8,000 ரூபாய்…
பருவநிலை மாற்றத்தின் போது ஏற்படும் சளி மற்றும் இருமல் போன்ற உபாதைகளுக்கு, நமது சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டி மசாலாப்…