வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்றபோது, சேதமடைந்த தனது மிதிவண்டிக்காக ராகுல் காந்தி முன் சிறுவன் அழுததை அடுத்து, அமிர்தசரஸைச் சேர்ந்த ஆறு வயது அம்ரித்பால் சிங் என்ற சிறுவனுக்கு புதிய மிதிவண்டியை வாங்கி கொடுத்துள்ளார் ராகுல் காந்தி.
ਇਹੀ ਹੈ ਮੁਹੱਬਤ ਦੀ ਦੁਕਾਨ❤️
ਜਿੱਥੇ ਇੱਕ ਨੇਤਾ ਅਤੇ ਜਨਤਾ ਵਿੱਚ ਦਿਲ ਦਾ ਰਿਸ਼ਤਾ ਬਣਦਾ ਹੈ!
ਇਹ ਹੈ ਰਾਹੁਲ ਗਾਂਧੀ ਦੀ ਪਹਿਚਾਣ 🙏🏼#RGvisitPunjab pic.twitter.com/vd59iWgm26
— Punjab Congress (@INCPunjab) September 17, 2025
செப்டம்பர் 15 அன்று பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட காந்தி, அமிர்தசரஸில் உள்ள கோனேவால் கிராமத்தில் உள்ள அமிர்தபாலின் இல்லத்திற்குச் சென்றார். அப்போது சிறுவன் தனது சேதமடைந்த சைக்கிளை நினைத்து அழுது கொண்டிருந்தான். காந்தி அவனை கட்டிப்பிடித்து, ஆறுதல் கூற முயன்று, புதிய சைக்கிள் வாங்கித் தருவதாக உறுதியளித்தார். இதையடுத்து தற்போது சைக்கிள் வாங்கி கொடுத்துள்ளார். சிறுவன் அமிர்தபாலின் தந்தை ரவிதாஸ் சிங், புதிய சைக்கிளுக்கு காந்திக்கு நன்றி தெரிவித்தார்.
