ஐயோ… என் குழந்தையை விட்டுடு… 3 வயது சிறுவனைத் தூக்கி வீசிய வெறிமாடு… காப்பாற்றப் போராடிய தாய்… மனதை கதறவைக்கும் CCTV வீடியோ…!!

By Swetha on புரட்டாதி 14, 2026

Spread the love

அபு ரோடில் குடியிருப்பு பகுதியொன்றில், வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவனை அப்பகுதியில் சுற்றித் திரிந்த மாடு ஒன்று திடீரெனத் தாக்கியது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு, அவனைக் காப்பாற்றுவதற்காகப் பதறியடித்து ஓடிவந்த தாயையும் அந்த மாடு முட்டித் தள்ளியது. இதில் தாயும் மகனும் காயமடைந்தனர்.

இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த இணையவழி காணொலியில், மாடு சிறுவனை நோக்கிப் பாய்வதும், தாய் ஓடிவந்து தன் குழந்தையைக் காப்பாற்றப் போராடுவதும் தெளிவாகப் பதிவாகி மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

   

https://www.instagram.com/reel/DdOkQ_ijdM0/?utm_source=ig_web_button_share_sheet

   

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்களுக்கும் குறிப்பாகக் குழந்தைகளுக்கும் பெரும் ஆபத்து நிலவுவதாகவும், உள்ளாட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்துத் திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.