அந்த வேலையெல்லாம் சில்க்கிடம் நடக்காது.. கூடப் பணியாற்றிய நடிகை பகிர்ந்த ஆச்சர்யத் தகவல்!

By vinoth on தை 31, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் கதாநாயக, கதாநாயகிகளுக்கு என்று ஒரு ரசிகப் பெரும்கூட்டம் இருப்பது கவர்ச்சி நடிகைகளுக்கும் ரசிகர் கூட்டம் உள்ளது. அந்த வரிசையில் முக்கிய இடம் பிடித்தவர் சில்க் ஸ்மிதா. அவர் தான் நடித்த பெரும்பாலான படங்களில் கவர்ச்சி வேடங்களையே தேடி தேடி நடித்தார் என்றாலும், அவரிடம் ஒரு தனித்துவம் இருந்தது. இதனால் தென்னிந்தியா முழுவதும் அவருக்கு படங்களுக்கு வரவேற்பு இருந்தது.

ஆனாலும் அவர் தன்னுடைய 35 ஆவது வயதில் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். இன்றுவரையும் அவரின் மரணத்துக்கான காரணம் மிகவும் மர்மமாகவே உள்ளது. அப்படி இந்த மண்ணுலகை விட்டு பிரிந்து 27 ஆண்டுகள் ஆன பிறகும் ஒரு நடிகை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார் என்றால் அது நடிகை சில்க் ஸ்மிதா மட்டும்தான்.  சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரின் வாழ்க்கையை தழுவி தி டர்ட்டி பிக்சர் எனும் திரைப்படம் இந்தியில் எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது.

   

இயக்குனர் பாலு மகேந்திராவிடம் ஒருமுறை “நீங்கள் இயக்கியதில் உங்களைக் கவர்ந்த கருப்பு நிறம் கொண்ட நடிகை யார்?” என்ற கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு அவர் “நான் சில்க் ஸ்மிதாவைதான் சொல்வேன். நான் அர்ச்சனா, சில்க் ஸ்மிதா மற்றும் மௌனிகா ஆகியோரை இயக்கியுள்ளேன். அதில் சில்க் ஸ்மிதாவைதான் stunningly beautiful என்று சொல்வேன்.” எனப் பாராட்டியிருந்தார்.

   

 

அப்போதெல்லாம் நிறைய தயாரிப்பாளர்கள் சம்பள பாக்கி வைத்துவிட்டு பின்னர் அதைக் கொடுக்காமலேயே ஏமாற்றி விடுவார்களாம். அது போன்ற தயாரிப்பாளர்களை சில்க் ஸ்மிதா டீல் செய்யும் விதமே வேறாம். இந்நிலையில் சில்க் ஸ்மிதா கவர்ச்சி நடிகையாக நடித்த பல படங்களில் கதாநாயகியாக நடித்த ராதிகா அவரைப் பற்றி ஒரு சுவாரஸ்யத் தகவலைப் பகிர்ந்துள்ளார்.

அதில் “தயாரிப்பாளர்கள் யாராவது வந்து சம்பளம் அப்புறமாக தருகிறேன் என்று சொன்னால், ‘ஏன் சார் எனக்கு இப்போ மார்க்கட் இருக்கு. அதனால்தான் என்கிட்ட வர்றீங்க. கேமரா எங்க வேணாலும் வச்சு ஷூட் பண்றீங்க.  காலுக்கு கீழ வச்சுக்கிறீங்க. இதுவே எனக்கு மார்க்கெட் இல்லன்னா என்ன நடிக்கக் கேட்டு வருவீங்களா?. சம்பளம் கொண்டு வாங்க நடிக்கிறேன்’ என்று கறாராக சொல்வார் சில்க் ஸ்மிதா.” எனத் தெரிவித்துள்ளார்.