Categories: CINEMA

கமல் சொன்னது பொய்யா..? பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வரும் பெண்களுக்கு இப்படி ஒரு அவலமா..? உள்ளதை ஓப்பனாக சொன்ன ரசித்தா.

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி 3ம் பாகத்தில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தனர் ரக்சிதா மகாலட்சுமி. பிரிவோம் சந்திப்போம் சீரியலில் நடித்த போது, உடன் நடித்த தினேஷ் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், சில ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட பிரிந்துவிட்டனர்.

மீண்டும் மனைவியுடன் சேர்ந்த வாழ தினேஷ் விருப்பம் தெரிவித்து வரும் நிலையில், ரக்சிதா மகாலட்சுமி அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார். டிவி சீரியல் மட்டுமின்றி சில சீரியல்களிலும் நடித்துள்ள ரக்சிதா மகாலட்சுமி, விரைவில் போலீஸ் அதிகாரியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அந்த புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலானது.

கடந்த 3 மாதங்களுக்கு மேலாக நடந்த விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், ரக்சிதா மகாலட்சுமியின் கணவர் தினேஷ் பங்கேற்றார். அதற்கு முந்தைய ஆண்டு 2022ல் நடந்த பிக்பாஸ் சீசன் 6ல், ரக்சிதா மகாலட்சுமி பங்கேற்றார். ஆனால் இருவரும் டைட்டில் வின்னர், ரன்னர் போன்ற முக்கிய இடங்களை பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் ரக்சிதா மகாலட்சுமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்பவர்கள், அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்வார்கள். சினிமாவில் பெரிய இடத்தை பிடிப்பார்கள் என, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் அடிக்கடி கூறுகிறார். அப்படி யாருமே சினிமாவில் ஜெயிப்பதில்லை. அப்படி என்றால் கமல் சொல்வது பொய்யா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ரக்சிதா மகாலட்சுமி கூறியதாவது, திறமை இருந்தால் சினிமா வாய்ப்புகள் தேடி வரும். திறமை இல்லை என்றால் யாராக இருந்தாலும் வாய்ப்பு கிடைக்காது என்பதுதான் உண்மை. பிக்பாஸ் வீடு என்பது ஒரு பிளாட்பாரம். அதை பல லட்சக்கணக்கான மக்கள் பார்க்கின்றனர். நடனம், பாட்டு, வசனம் என அங்கு திறமையை காட்டும்போது ஒரு இயக்குநர் அதை பார்த்தால், இவரிடம் திறமை உள்ளதே, இவருக்கு அந்த வாய்ப்பை தரலாமே என முன்வரலாம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் என்பதற்காக யாரும் வாய்ப்பு தர மாட்டார்கள்.

எனக்கும் கூட அப்படித்தான். நானும் ஏற்கனவே சரவணன் மீனாட்சி உட்பட பல சீரியல்களில் நடித்திருக்கிறேன். கமல் சொன்னது, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு திறமை இருப்பவர்கள் அவர்களது வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு போகலாம் என்றுதான். அது திறமை, அது அவர்களது கையில்தான் இருக்கிறது. வாய்ப்புகளை உருவாக்கி முன்னேற போகிறீர்களா, அப்படியே பழையபடி இருக்க போகிறீர்களா என்பதுதான் கமல் அறிவுறுத்திய விஷயம். அதனால், திறமை இருந்தால் நிச்சயமாக ஜெயிக்க முடியும், என்று கூறியிருக்கிறார் நடிகை ரக்சிதா மகாலட்சுமி.

Sumathi
Sumathi

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

4 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

4 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

4 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

5 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

5 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

5 மணி நேரங்கள் ago