அமித் ஷா போட்ட அதிரடி ஸ்கெட்ச்! நள்ளிரவில் வந்த போன் கால்… பதறியடித்து டெல்லி ஓடும் ஆளுநர் அர்லேக்கர்…!

By Visaka on ஆடி 1, 2026

Spread the love

தமிழகத்தின் முழுநேர ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி அண்மையில் மேற்கு வங்க மாநிலத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து, கேரள ஆளுநராக இருக்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகக் கூடுதல் பொறுப்பேற்றார். இரு மாநிலங்களின் அரசு நிர்வாகத்தையும் ஒரே நேரத்தில் கவனிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் பணிச்சுமை குறித்து அவர் அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் விவரித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, தமிழகத்திற்கு நீண்ட காலத்திற்குப் பொறுப்பு ஆளுநரை நியமித்திருப்பது சரியாக இருக்காது எனப் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமித் ஷா ஆலோசித்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில், தமிழகத்திற்குப் புதிய முழுநேர ஆளுநரை நியமிப்பது குறித்து முக்கிய முடிவெடுப்பதற்காகப் பொறுப்பு ஆளுநர் அர்லேக்கருக்கு டெல்லியிலிருந்து அவசர அழைப்பு வந்துள்ளது. அதன் பேரில் இன்று டெல்லி செல்லும் அவர், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசவுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, தமிழ்நாடு அல்லது கேரளா ஆகிய இரு மாநிலங்களில் எங்கு முழுநேர ஆளுநராகப் பணியாற்ற அவர் விரும்புகிறார் என்ற விருப்பம் கேட்கப்பட்டு, அதன் அடிப்படையிலேயே இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

   

மத்திய அரசின் இந்த அதிரடி நகர்வால், தமிழகத்திற்குப் புதிய ஆளுநர் நியமிக்கப்படுவாரா அல்லது அர்லேக்கரே முழுநேர ஆளுநராக நீடிப்பாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. இதற்கிடையே, அர்லேக்கர் தமிழகத்தின் முழுநேர ஆளுநராகப் பணியாற்றவே அதிக விருப்பம் காட்டி வருவதாக சென்னை ராஜ் பவன் அதிகாரிகள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. அவரது இந்த டெல்லிப் பயணத்தின் முடிவில், தமிழக ஆளுநர் நியமனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.