அதிமுகவில் குடும்ப அரசியல்.. மகன் மிதுனைத் துணை முதல்வர் ஆக்க EPS திட்டம்..? திமுக – அதிமுக ரகசிய டீல்… அம்பலப்படுத்திய சவுக்கு சங்கர்..!!

Spread the love

அதிமுகவின் தற்போதைய நிலை மற்றும் கட்சியின் தலைமை குறித்து யூடியூபர் சவுக்கு சங்கர் தனது எக்ஸ் (X) தளத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா 1996 தோல்விக்குப் பிறகு தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை கட்சியை விட்டு ஒதுக்கி வைப்பதாக எழுதிய கடிதத்தை அவர் நினைவு கூர்ந்துள்ளார். இதன் மூலம் ஜெயலலிதாவின் ஆளுமையையும், தலைமைப் பண்பையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், தற்போதைய அதிமுக தலைமை அதை பின்பற்றவில்லை எனச் சாடியுள்ளார்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சந்தித்த மோசமான தோல்விக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க மறுப்பதாக சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்குச் சொந்தமாக குடும்பம் இல்லாததால் தொண்டர்களை மட்டுமே நம்பி கட்சியை நடத்தினார்கள் என்றும், ஆனால் எடப்பாடி பழனிசாமிக்குக் குடும்பம் உள்ளதால் தற்போது அதிமுகவில் குடும்ப ஆதிக்கம் தலைதூக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அதிமுகவின் அனைத்து முக்கிய முடிவுகளையும் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் மட்டுமே எடுத்து வருவதாகவும், அவரது பேச்சை எடப்பாடி பழனிசாமியே மீறுவதில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், தன் மகன் மிதுனைத் துணை முதலமைச்சர் ஆக்குவதற்காக, திமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கலாம் என்ற நோக்கில் உதயநிதி ஸ்டாலினை “பாஷ்யம் அபினேஷ் வீட்டில்” எடப்பாடி பழனிசாமி சந்தித்ததாக சவுக்கு சங்கர் பரபரப்புக் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். இந்தச் சந்திப்பு தன் மகன் கொடுத்த அழுத்தத்தால் தான் நடந்தது என்பதை எடப்பாடி பழனிசாமியால் மறுக்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொண்டர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பேரியக்கத்தில் இப்படிப்பட்ட குடும்ப ஆதிக்கம் உருவாவது சரியா என்றும், 2 கோடி தொண்டர்களைக் கொண்ட அதிமுகவை வழிநடத்த எடப்பாடி பழனிசாமிக்குத் தகுதி உள்ளதா என்றும் சவுக்கு சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார். தனக்கென்று குடும்பமே இல்லை, அதனால் ஊழல் செய்ய மாட்டேன் என்று பறைசாற்றி ஜெயலலிதா கட்சியை வழிநடத்தினாரா அல்லது மகன் பேச்சைக் கேட்டு எடப்பாடி பழனிசாமி வழிநடத்துகிறாரா என்பதை முடிவு செய்ய வேண்டியது அதிமுக தொண்டர்களின் கையில்தான் உள்ளது என அவர் தனது பதிவில் பதிவிட்டுள்ளார்.

Soundarya

Recent Posts

“சாலையில் பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லையா?”.. நடந்து சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்த வாலிபர் செய்த அசிங்கம்.. இணையத்தில் குவியும் கண்டனம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள கிரிவலம் வரும் பாதையில் (பரிக்ரமா மார்க்) பெண்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு…

4 minutes ago

ஒன்றரை வயது குழந்தையைச் சுவற்றில் மோதி கொன்ற தாயின் கள்ளக்காதலன்.. எலும்புகள் உடைந்து துடிதுடித்த பிஞ்சு உயிர்.. ; மருத்துவரால் அம்பலமான உண்மை..!!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த அஷ்கார் (31) என்பவர், தனது மனைவி அமீனாவை வரதட்சணை கேட்டுத்…

23 minutes ago

“பெண் போலீசுக்கு ஆபாச மெசேஜ்.. ஸ்டேஷனுக்கே வந்த கணவர்.. துப்பாக்கி முனையில் மிரட்டிய இன்ஸ்பெக்டர் திலீபன்.. டிஐஜி எடுத்த அதிரடி முடிவு”..!!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த திலீபன், தனக்குக் கீழ் பணியாற்றும்…

35 minutes ago

ஸ்கூல் லஞ்ச் பிரேக்கில் காரில் உல்லாசம்.. “ஆசிரியரை குஷிப்படுத்தவே ஆபாச படங்கள் அனுப்பினேன்..” 17 வயது மாணவன் கொடுத்த வாக்குமூலத்தால் உறைந்த போலீஸ்..!!

ஆஸ்திரேலியாவில் திருமணமான ஆசிரியை ஒருவர் தனது பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவருடன் பாலியல் ரீதியாகத் தொடர்பு வைத்திருந்ததாகக் கைது…

41 minutes ago

BREAKING: திடீரென ரூ.12,000 உயர்ந்தது… தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்….!

கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில்…

58 minutes ago