சென்னையில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான போலீஸ் ஏட்டு வேலப்பன், துறை ரீதியான வழக்கமான நடைமுறைகளைக் கடந்து உடனடியாக நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது, குற்றவாளிகளுக்குக் கடுமையான எச்சரிக்கையை விடுக்கும் ஒரு மிகச் சரியான அதிரடி நடவடிக்கையாகும். பொதுவாக இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் அரசு ஊழியர்கள் முதலில் தற்காலிகப் பணிநீக்கம் (Sustend) செய்யப்பட்டு, நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னரே நிரந்தரமாக நீக்கப்படுவதுதான் வழக்கம்;.
ஆனால், முதல்வர் விஜய்யின் “பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை பாயும்” என்ற எச்சரிக்கைக்கு இணங்க, இம்முறை காவல்துறை உடனடியாக இந்தத் துணிச்சலான முடிவை எடுத்துள்ளது. சட்டத்தைக் காக்க வேண்டிய காவலரே இத்தகைய கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டதால், இந்த உடனடி நீக்கம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நம்பிக்கையளிப்பதோடு மட்டுமல்லாமல், காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பகத்தன்மையை நிலைநிறுத்தவும், இதுபோன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபட நினைப்போருக்கு ஒரு தகுந்த பாடமாகவும் அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
கேரேஜை நோக்கிச் செல்லும் ஒரு சாதாரண அன்றாடப் பயணம், ஒரு நொடியில் மிகக் கொடூரமான "கனவாக" மாறும் என்று 25…
ஹரியானா மாநிலம் பரீதாபாத் பகுதியில் ஆன்லைன் தளம் மூலம் ஆர்டர் செய்த பெண் வாடிக்கையாளர் ஒருவருக்கு, டெலிவரி ஊழியரால் நேர்ந்த…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற பி.எட். நுழைவுத் தேர்வு மையத்திற்கு வெளியே, சாக்கடைக் கால்வாயின் கான்கிரீட் மூடி உடைந்ததில்…
தற்போது சமூக ஊடகங்களில் ஒரு குடும்பத்தினர் இரவு உணவு சாப்பிடும் போது எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.…
"அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்து, தற்கொலை செய்துகொண்ட அக்காட்சி நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர்…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் மேற்கொள்ளும் கள ஆய்வு நிகழ்வுகளை, சமூக ஊடகங்களில்…