புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி மாணவிகள் காதில் கம்மல், கழுத்தில் செயின், கைகளில் கயிறு மற்றும் வளையல் உள்ளிட்டவற்றை அணிந்து வரக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கான கட்டுப்பாடு குறித்த புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் தங்களுடைய தலைமுடியை சீராக வெட்டி இருக்க வேண்டும். கை மற்றும் கால்களில் நகங்களை ஒழுங்காக வெட்டி இருக்க வேண்டும். காதில் கம்மல், கழுத்தில் செயின், கைகளில் கயிறு, வளையல் உள்ளிட்டவற்றை மாணவ மாணவிகள் அணிந்து வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு கொண்டு செல்லும் லேப்டாப்பில் பாரங்களைத் தவிர விளையாட்டு மற்றும் விரும்பத்தகாத வீடியோக்கள் இருந்தால் லேப்டாப் பறிமுதல் செய்யப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது. மேலும் எக்காரணம் கொண்டு மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்து வர அனுமதி கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் வகுப்பு தொடங்குவதற்கு குறைந்தது 15 நிமிடங்கள் முன்பாக வரவேண்டும் எனவும் தாமதமாக வந்தால் அவர்களின் பெற்றோர்கள் வகுப்பு ஆசிரியரிடம் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த விதிமுறை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு பொருந்தும் என அரசு தெரிவித்துள்ளது.
சென்னை வடபழனியைச் சேர்ந்த நவீன் என்பவரது தாத்தா ராஜேந்திரனுக்குச் சொந்தமான 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம், ஆள்மாறாட்டம் மூலம்…
அசாத்திய புத்திசாலித்தனம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஈரானுக்கு எதிரான போரில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் மொசாட் ஏஜென்ட் 'M'…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு இன்னும் முழுமையாகக் தணியாத நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி…
சினிமா உலகில் பல நட்சத்திர தம்பதிகள் இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் 'ஃபேவரைட்' லிஸ்டில் இருப்பவர்கள் ஜெனிலியா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக்.…
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் தற்போதே அதிரத் தொடங்கியுள்ளது. இத்தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) சார்பில்…
மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான போர் நிறுத்தத்தை…