தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைக்க இன்னும் 10 இடங்கள் தேவைப்படும் நிலையில் மெரினா கடற்கரையில் போராட்ட மேகங்கள் சூழ்ந்துள்ளன. தங்கள் தலைவர் விஜய்யை முதலமைச்சராகப் பொறுப்பேற்க வலியுறுத்தி, ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போன்ற ஒரு மாபெரும் அறவழிப் போராட்டத்தை மெரினாவில் முன்னெடுக்க அக்கட்சியின் தொண்டர்கள் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் இது குறித்துத் தீவிரமாகப் பதிவிட்டு வருவதைத் தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரை முழுவதும் காவல்துறை தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவின் அனைத்து நுழைவு வாயில்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதோடு, கூட்டமாகத் திரளுவதைத் தவிர்க்கவும் காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு பெரும் அரசியல் சதுரங்க வேட்டையைத் துவக்கி…
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சென்னை கிண்டியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழக அரசியலில் ஒரு அசாதாரணமான சூழல்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களை வென்ற தமிழக…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில், திருமண நாளன்றே மணமகளுக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விடுத்த கூட்டணி அழைப்பிற்குப் பிறகு திருமாவளவன்…