“தனியாக வீட்டிற்கு வா டார்லிங், வினாத்தாள் தருகிறேன்” மாணவியிடம் அத்துமீறிய பல்கலைக்கழக பேராசிரியர்… அம்பலமான லீலைகள்..!!

By Soundarya on வைகாசி 17, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ பல்கலைக்கழகத்தில், இறுதியாண்டு பி.எஸ்.சி படிக்கும் மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட புகாரில் பேராசிரியர் பரம்ஜீத் சிங் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தப் பேராசிரியர் மாணவியிடம் வினாத்தாளைத் தருவதாகக் கூறி, தனது வீட்டிற்குத் தனியாக வருமாறு பேரம் பேசிய அதிர்ச்சியூட்டும் ஆடியோ பதிவு தற்பொழுது வெளியாகி இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது.

வெளியாகியுள்ள ஆடியோ பதிவில், “நான் உனக்காக இரண்டு தேர்வு வினாத்தாள்களைத் தயார் செய்து வைத்துள்ளேன், எனது வீட்டிற்கு வந்தால் அதைத் தருகிறேன்” என்று பேராசிரியர் அழைக்க, அதற்கு அந்த மாணவி, “நான் பாடத்திட்டங்கள் முழுவதையும் படித்துவிட்டேன், எனக்கு வினாத்தாள் தேவையில்லை” என்று தைரியமாக மறுத்துள்ளார். இருப்பினும், அந்தப் பேராசிரியர் பலமுறை மாணவியைத் தனது வீட்டிற்கு வருமாறு கட்டாயப்படுத்தியதோடு, விடுப்பில் இருந்தபோது கூட தொடர்ந்து தொலைபேசியில் அழைத்து கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியதாகப் பல்கலைக்கழக அதிகாரிகளிடம் மாணவி புகார் அளித்துள்ளார்.

   

இந்த ஆடியோ விவகாரம் பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பேராசிரியரைப் பல்கலைக்கழகத்தில் இருந்து உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு மாணவர் அமைப்புகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. பல்கலைக்கழக அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் எப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்து பேராசிரியரை உடனடியாகக் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கல்வி நிறுவனத்திற்குள்ளேயே இத்தகைய வினாத்தாள் பேரம் மற்றும் பாலியல் அத்துமீறல் அரங்கேறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.