![2024-06-02_20-35-26 - Tamizhanmedia.net](https://tamizhanmedia.net/wp-content/uploads/2024/06/2024-06-02_20-35-26.jpg)
CINEMA
நான் மறக்கவே மாட்டேன்… சுகன்யா செய்த அந்த காரியம்… தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்…!!
திரை உலகில் எத்தனையோ நடிகர் நடிகைகள் இருந்தாலும் எந்த சூழ்நிலையிலும் எளிமையாக நடப்பவர்கள் சிலரே அவர்களில் ஒருவர் தான் 90களில் திரையுலகில் கதாநாயகியாக வலம் வந்த சுகன்யா. 1991 ஆம் ஆண்டு தமிழில் வெளியான புது நெல்லு புது நாத்து திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார் சுகன்யா.
இவர் நடித்த மூன்றாவது படமான சின்ன கவுண்டர் படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார். இப்படி தொடக்கத்திலேயே சிறந்த நடிகையாக விளங்கிய சுகன்யா எந்த அளவிற்கு எளிமையானவர் என அவர் நடித்த சின்ன மாப்பிள்ளை திரைப்படத்தை தயாரித்த டி சிவா அவர்கள் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
சின்ன மாப்பிள்ளை படப்பிடிப்பிற்காக கோபிசெட்டிபாளையத்தில் தங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஆனால் அப்போது சுகன்யாவிற்கு தங்குவதற்கு ஹோட்டலில் அறை இல்லாமல் இருந்துள்ளது. அவர் தனது தாய் மற்றும் தந்தையாருடன் படப்பிடிப்பிற்கு வந்துள்ளார்.
கடைசியாக ஏசி ரூம் இல்லாமல் சாதாரணமான ரூம் கூட இல்லாமல் புதிதாக கட்டப்பட்ட கட்டி முடிக்கப்படாத அறை ஒன்றுதான் கிடைத்துள்ளது. அந்த அறையில் ஜன்னல் கதவுகளும் வைக்கப்படவில்லை இதனால் டி சிவா அவர்கள் சுகன்யாவிடம் சென்று இந்த ஒரு அறை தான் இருக்கிறது கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியுமா என கேட்டுள்ளார்.
உடனே சுகன்யாவும் தாங்கள் அட்ஜஸ்ட் செய்து கொள்வதாக கூறி அந்த அறையிலேயே வேஷ்டி மற்றும் சேலைகளை வைத்து ஜன்னல்களை மறைத்து தங்கி உள்ளார். அந்த அளவிற்கு எளிமையாக சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல்படுபவர் நடிகை சுகன்யா என கூறியுள்ளார்