அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. நேற்று காலை உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கு கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும். இந்த புயலுக்கு UAE பரிந்துரைத்த சென்யார் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
