“20 பாலியல் வன்கொடுமை… 18 கொலை வழக்குகள்…” சிறையில் ராஜ வாழ்க்கை வாழும் கைதி… திடீர் பரபரப்பு…!!

By Devi Ramu on கார்த்திகை 10, 2025

Spread the love

பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார மத்திய சிறை கர்நாடகாவின் பெரிய சிறப்பு சிறைகளில் ஒன்று. இங்கு கொலை வழக்குகளில் இருந்து ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் வரை பல குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் சிறையில் சிறப்பு வசதிகள் அளிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதை உறுதிப்படுத்தும் வகையில் ரவுடி உமேஷ் ரெட்டியின் வீடியோ வெளியானது.

20 பாலியல் வன்கொடுமை வழக்குகள், 18 கொலை வழக்குகளில் குற்றவாளியான இவருக்கு முதலில் மரண தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் உச்ச நீதிமன்றம் 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையாக குறைத்த நிலையில் அவர் தற்போது பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்த வீடியோவில் உமேஷ் ரெட்டி இரண்டு ஸ்மார்ட் போன்களுடன் அமர்ந்திருக்கும் காட்சி பதிவாகியுள்ளது. அவரது அறையில் டிவி உட்பட சொகுசு விடுதி போன்ற வசதிகள் இருப்பது தெரிகிறது. இது கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

   

இதே போல் நடிகை ரன்யா ராவின் தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய தருண் ராஜு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரும் சிறைக்குள் செல்போன் பயன்படுத்தி சமைக்கும் வீடியோ வெளியானது. ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வழக்கில் கைதான குற்றவாளியும் சிறைக்குள் செல்போன் பயன்படுத்தியுள்ளார். ஏற்கனவே நடிகர்கள், அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு சிறையில் சிறப்பு வசதிகள் அளிப்பதாக வழக்குகள் வந்துள்ளன. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.