தெலுங்கு சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் நாக சைதன்யா. முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனான இவர் இறுதியாக தூதா என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். அதற்கு முன்னதாக வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி என்ற திரைப்படத்தில் நடித்தார். பெரும் எதிர்பார்ப்போடு படம் வெளியானாலும் அந்த படம் தோல்வியை சந்தித்தது. இப்போது தண்டல் என்ற திரைப்படத்தில் நடிக்கின்றார். இதில் இவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க உள்ளார். கண்டிப்பாக இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.
இதனிடையே விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்த போது தனக்கு ஜோடியாக நடித்த சமந்தாவை காதலித்த நாக சைதன்யா வீட்டில் காதல் விவகாரத்தை சொல்லி சம்மதம் வாங்கி கடந்த 2017 ஆம் ஆண்டு கோவாவில் வைத்து திருமணம் செய்து கொண்டார். சில வருடங்கள் மட்டுமே இணைந்து வாழ்ந்த இவர்கள் பிரிவதாக அறிவிப்பை வெளியிட்டு விவாகரத்தும் பெற்றுக் கொண்டனர். சமந்தாவை பிரிந்த பிறகு சில வருடங்களுக்கு முன்பில் இருந்து நாக சைதன்யா சோபிதா உடன் டேட்டிங் செய்து வந்தார். அவர்கள் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியானது.
ஆனால் இருவரும் தங்களது காதலை பொதுவெளியில் அறிவிக்கவில்லை. இப்படியான நிலையில் இருவருக்கும் திடீரென நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் சில வாரங்களுக்கு முன்பு இருவருக்கும் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இப்படியான நிலையில் நாக சைதன்யா சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கிராண்ட் லுக்கில் இருக்கும் ஒரு கோட் அணிந்திருந்தார். அது குறித்து ரசிகர்கள் இணையத்தில் தேட தொடங்கிய நிலையில் Gauav Gupta என்ற அந்த கோட் விலை சுமார் ரூ.2,95,000 லட்சம் என தெரிய வந்துள்ளது. இதன் விலையை கேட்ட ரசிகர்கள் ஆடி போய் இந்த செய்தியை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…