கடைகளில் விற்கக்கூடிய பாத்திரம் கழுவும் திரவங்களில் அதிகப்படியான கெமிக்கல் கலந்திருப்பதால் அதிகமாக பயன்படுத்தும் பெண்களுக்கு சில சேதங்களையும், வளர்ச்சிகளையும் அது ஏற்படுத்தக் கூடும். அதிக விலை கொடுத்து வாங்கினாலும் பக்க விளைவுகள் ஏற்படும். ஆனால் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து பாத்திரம் கழுவும் திரவத்தை எளிதில் தயாரிக்கலாம். அதற்கு உங்க கையில் வெறும் பத்து ரூபாய் மட்டும் இருந்தால் போதும். இயற்கையான நறுமணத்துடன் சுத்தமாக பாத்திரம் கழுவ இந்த திரவம் உதவியாக இருக்கும். புத்துணர்ச்சி ஊட்டக்கூடிய இந்த திரவத்தை தயாரிக்க எலுமிச்சை பழங்கள் – 4, தண்ணீர் 1 லிட்டர், பாத்திரம் கழுவும் திரவம் 2 ஸ்பூன் தேவைப்படும்.
முதலில் நான்கு எலுமிச்சை பழங்களை தனியாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் வெட்டி வைத்திருக்கும் எலுமிச்சை துண்டுகளை சேர்க்கவும். அதில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்கவும். சுமார் இரண்டு நிமிடங்கள் கொதித்து வரும்போது இரண்டு நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை அணைத்துவிட்டு தண்ணீர் முழுமையாக குளிர்ந்ததும் வேகவைத்த எலுமிச்சை துண்டுகளை கையால் தண்ணீரில் நன்கு பிழிந்து எலுமிச்சையின் கடைசி சொட்டு வரை கூட வீணாகாமல் எடுக்க வேண்டும். பிறகு ஒரு வடிகட்டியை பயன்படுத்தி எலுமிச்சை விதைகளை அகற்ற வேண்டும். கடைசியாக எலுமிச்சை கலந்த நீரில் இரண்டு ஸ்பூன் வழக்கமான பாத்திரம் கழுவ பயன்படுத்தும் திரவத்தை கலந்தால் நீங்கள் இயற்கையான முறையில் பயன்படுத்தும் பாத்திரம் கழுவும் திரவம் தயாராகிவிடும். இதனால் பாத்திரம் பளபளப்பாகவும் நறுமணத்துடனும் இருக்கும்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களை வென்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக)…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மாநில அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் பரபரப்பைக்…
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அரங்கேறிய ஒரு விரும்பத்தகாத…
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல நாட்கள் கடந்தும், ஆட்சியமைப்பதில் நிலவும் இழுபறி நீடித்து வருவது அரசியல் களத்தில்…
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை குறித்து ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்த பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்,…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மாநில அரசியல் களம் புதுச்சேரியை நோக்கி…